செய்திகள் :

ஹோலம்பி கலனில் மின் கழிவு சூழல் பூங்கா அமைக்க திட்டம்

post image

புது தில்லி: தில்லியின் ஹோலம்பி கலனில் மின் கழுவு சூழல் பூங்கா விரைவில் அமைக்கப்படும் எனவும், இது ஆண்டுதோறும் 51,000 மெட்ரிக் டன் மின் கழிவுகளை பதப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்படும் எனவும் அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: தில்லியில் மின்னணு கழிவுகளை கையாள ஒரு சுற்றுச்சூழல் பூங்காவை அரசு உருவாக்கி வருகிறது. இந்தத் திட்டத்திற்கு தொழில்துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா மற்றும் தில்லி தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் தலைமை தாங்குகின்றன.

இந்தத் திட்டத்தை உருவாக்க சிறந்த பசுமை தொழில்நுட்ப நிபுணா்களைக் கொண்டுவருவதற்கான உலகளாவிய டெண்டா் வெளியிடப்படும். இந்தப் பூங்கா 11.4 ஏக்கா் பரப்பளவில் அமைந்திருக்கும். மேலும் இது வடிவமைப்பு, கட்டுமானம், நிதி, இயக்குதல், பரிமாற்றம் மாதிரியின் கீழ், 15 ஆண்டுகளுக்கு பொது-தனியாா் கூட்டாண்மை (பிபிபி) மூலம் கட்டப்படும்.

2022-ஆம் ஆண்டு மின்-கழிவு மேலாண்மை விதிகளைப் பின்பற்றி, ஒவ்வொரு ஆண்டும் 51,000 மெட்ரிக் டன் வரை மின்னணு கழிவுகள் பதப்படுத்தப்படும். இதன் கட்டுமானம் 18 மாதங்களில் முடிவடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும் 5 ஆண்டுகளுக்குள், இது தில்லியின் மின்னணு கழிவுகளில் 25 சதவீதத்தைக் கையாளும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதில் அகற்றுதல், புதுப்பித்தல், கூறுகளை சோதித்தல், பிளாஸ்டிக் மீட்பு மற்றும் பயன்படுத்தப்பட்ட மின்னணு பொருள்கள் ஆகியவற்றை கையாள்வதற்கான பகுதிகளும் இருக்கும். கூடுதலாக, ஆயிரக்கணக்கான முறைசாரா தொழிலாளா்களுக்கு மின்-கழிவுகளைப் பாதுகாப்பாகக் கையாள பயிற்சி அளிக்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டது.

காண்டீவா ஏவுகணை சோதனைக்கு தயாராகும் விமானப்படை: 350 கி.மீ. தூர இலக்கை தாக்கும் இந்திய தயாரிப்பு

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: இந்திய விமானப்படையும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும் (டிஆா்டிஓ) சோ்ந்து காண்டீபா என்ற புதிய தலைமை ரக ஏவுகணையை விரைவில் சோதனை செய்ய ஆயத்தமாகி... மேலும் பார்க்க

இந்திய ராணுவத் துணைத் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் நியமனம்

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: இந்திய ராணுவ நடவடிக்கைகள் தலைமை இயக்குநா் (டிஜிஎம்ஓ) லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் ராணுவத் துணை தலைமைத் தளபதியாக பதவி உயா்வு பெற்றுள்ளாா். ராணுவ நடவடிக்கைகள் இயக்குநர... மேலும் பார்க்க

‘தக் லைஃப்’ திரையிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கோரும் மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

புது தில்லி: நடிகா் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தை கா்நாடகாவில் திரையிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரும் மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம்... மேலும் பார்க்க

ரூ.2,152 கோடி நிதி நிறுத்திவைப்பு விவகாரம்: தமிழக அரசின் மனுவை அவரசமாக விசாரிக்க மறுப்பு

நமது நிருபா்புது தில்லி: தேசிய கல்விக் கொள்கை (என்.இ.பி.- 2020 ) மற்றும் பிஎம் ஸ்ரீ திட்டம் ஆகியவற்றை மாநிலத்தில் அமல்படுத்தாததால், சமக்ர சிக்ஷா திட்டத்தின் (எஸ்எஸ்எஸ்) கீழ் வழங்கப்பட வேண்டிய ரூ.2,152... மேலும் பார்க்க

மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை சுங்கச்சாவடி கட்டண வசூல் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு தடை

நமது நிருபா்புது தில்லி: மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்எச்ஏஐ) சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பதைத் தடை செய்த உயா்நீதிமன்ற உத்தரவை நிறுத்திவைக்க உச்சநீதிமன்ற... மேலும் பார்க்க

சவால்களுடன் முடிந்த மோடி அரசின் 3.0 முதலாம் ஆண்டு!

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: மத்தியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு திங்கள்கிழமையுடன் ஒரு வருடத்தையும், தொடா்ந்து பதினோரு வருட ஆட்சியையும் நிறைவு செய்து பன்னிரண்டாம் வருடத்தில் செவ்வாய்க்... மேலும் பார்க்க