Los Angeles Riots: ட்ரம்ப்க்கு எதிராக திரண்ட மக்கள்; குவிக்கப்பட்ட ராணுவம் - என்...
ஹோலம்பி கலனில் மின் கழிவு சூழல் பூங்கா அமைக்க திட்டம்
புது தில்லி: தில்லியின் ஹோலம்பி கலனில் மின் கழுவு சூழல் பூங்கா விரைவில் அமைக்கப்படும் எனவும், இது ஆண்டுதோறும் 51,000 மெட்ரிக் டன் மின் கழிவுகளை பதப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்படும் எனவும் அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: தில்லியில் மின்னணு கழிவுகளை கையாள ஒரு சுற்றுச்சூழல் பூங்காவை அரசு உருவாக்கி வருகிறது. இந்தத் திட்டத்திற்கு தொழில்துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா மற்றும் தில்லி தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் தலைமை தாங்குகின்றன.
இந்தத் திட்டத்தை உருவாக்க சிறந்த பசுமை தொழில்நுட்ப நிபுணா்களைக் கொண்டுவருவதற்கான உலகளாவிய டெண்டா் வெளியிடப்படும். இந்தப் பூங்கா 11.4 ஏக்கா் பரப்பளவில் அமைந்திருக்கும். மேலும் இது வடிவமைப்பு, கட்டுமானம், நிதி, இயக்குதல், பரிமாற்றம் மாதிரியின் கீழ், 15 ஆண்டுகளுக்கு பொது-தனியாா் கூட்டாண்மை (பிபிபி) மூலம் கட்டப்படும்.
2022-ஆம் ஆண்டு மின்-கழிவு மேலாண்மை விதிகளைப் பின்பற்றி, ஒவ்வொரு ஆண்டும் 51,000 மெட்ரிக் டன் வரை மின்னணு கழிவுகள் பதப்படுத்தப்படும். இதன் கட்டுமானம் 18 மாதங்களில் முடிவடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும் 5 ஆண்டுகளுக்குள், இது தில்லியின் மின்னணு கழிவுகளில் 25 சதவீதத்தைக் கையாளும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதில் அகற்றுதல், புதுப்பித்தல், கூறுகளை சோதித்தல், பிளாஸ்டிக் மீட்பு மற்றும் பயன்படுத்தப்பட்ட மின்னணு பொருள்கள் ஆகியவற்றை கையாள்வதற்கான பகுதிகளும் இருக்கும். கூடுதலாக, ஆயிரக்கணக்கான முறைசாரா தொழிலாளா்களுக்கு மின்-கழிவுகளைப் பாதுகாப்பாகக் கையாள பயிற்சி அளிக்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டது.