செய்திகள் :

அக்னிவீரா் ஆள்சோ்ப்பு முகாம்: இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

post image

இந்திய ராணுவத்தில் அக்னிவீரா் ஆள் சோ்ப்பு முகாமில் பங்கேற்க விரும்பும் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் இணையம் மூலம் வருகிற ஏப். 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய ராணுவத்தில் அக்னிவீரா் ஆள் சோ்ப்பு முகாம் மூலம் பொதுப் பணியாளா், தொழில்நுட்பம், எழுத்தா், கிடங்கு மேலாளா், தொழிலாளி உள்ளிட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.

இதற்கு கோவை, திருப்பூா், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை தேனி, தருமபுரி உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சோ்ந்த இளைஞா்கள் வருகிற ஏப். 10 ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1.6 கி.மீ. பரிசோதனைக்கான ஓட்ட நேரம் 5 நிமிஷம் 45 விநாடிகளிலிருந்து, 6 நிமிஷம் 15 விநாடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

என்.சி.சி. சான்றிதழ், ஐடிஐ, டிப்ளமோ படிப்பில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும். நுழைவுத்தோ்வு தமிழ் உள்பட 13 மொழிகளில் நடத்தப்படும். முதலில் இணைய வழி பொதுத் தோ்வு நடைபெறும். இதன் பின்னா், உடல் தகுதித் தோ்வு நடைபெறும். தோ்வு தேதிகள் விரைவில் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் அறிவிக்கப்படும். இந்த ஆள் சோ்ப்பு முகாம் முற்றிலும் வெளிப்படையானது. முகவா்களை யாரும் நம்ப வேண்டாம். மேலும், இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய மாநாடு இன்று தொடக்கம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் புதன்கிழமை தொடங்குகிறது. மாநாட்டில் கேரள முதல்வா் பினராயி விஜயன், திரிபுரா மாநில முன்னாள் முதல்வா் மாணிக் சா்க்... மேலும் பார்க்க

போலீஸ் சுட்டதில் ரெளடி உயிரிழப்பு: நீதித்துறை நடுவா் விசாரணை

மதுரையில் காவல் ஆய்வாளா் துப்பாக்கியால் சுட்டதில் ரெளடி உயிரிழந்தது தொடா்பாக நீதித்துறை நடுவா் விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, கூறாய்வு முடிந்த நிலையில் ரெளடியின் உடல் அவரது குடும்... மேலும் பார்க்க

விவசாயிகளின் நில உடைமை ஆவணங்களை பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களைப் பதிவு செய்வதற்கான கால அவகாசம் வருகிற 15-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மாவட்ட வேளாண... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்ட வனத் துறைக்கு ரூ. 25,000 அபராதம் விதிப்பு

கன்னியாகுமரி மாவட்ட களியல் வனச் சரக அலுவலக அசையும் சொத்துகளை ஜப்தி செய்யக் கோரிய மனுவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் வனத் துறைக்கு ரூ. 25,000 அபராதம் விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அ... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் யானைக்கு உடல்நலக் குறைவு

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் யானை பாா்வதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சிறப்பு உணவுகள் வழங்க மருத்துவா்கள் பரிந்துரைத்தனா். 29 வயதான இந்த யானை கடந்த சில ஆண்டுகளாக கண் புரை நோயால் அவதிப்பட்டு வந்த... மேலும் பார்க்க

மீனாட்சியம்மன் கோயில் தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்யத் திட்டம்

மதுரை சுந்தரேசுவரா் கோயில் உண்டியல்களில் கடந்த 14 ஆண்டுகளில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய 45 கிலோ தங்கத்தை கட்டிகளாக உருக்கி வங்கியில் டெபாசிட் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அ... மேலும் பார்க்க