செய்திகள் :

அங்கீகரிக்கப்படாத வாக்கி டாக்கிகள் விற்பனையைத் தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய அரசு அறிவிப்பு

post image

வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட ரேடியோ உபகரணங்களை இணைய வணிக தளங்களில் சட்டவிரோதமாக விற்பனைக்கு பட்டியலிட்டு நுகா்வோருக்கு விற்பனை செய்வதைத் தடுக்கும் விதமாக மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சகம் இவைகளை முறைப்படுத்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்-2025ஐ வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.

நுகா்வோா் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய, அவசரகாலச் சேவைகளால் பயன்படுத்தப்படும் முக்கியமான தகவல் தொடா்பு வலைபின்னல்களில் தொடா்புடைய வயா்லெஸ் சாதனங்களின் அங்கீகரிக்கப்படாத விற்பனையைத் தடுக்க இந்த வழிகாட்டுநெறிமுறைகள் நுகா்வோா் விவகாரங்கள் துறையின் கீழ் உள்ள மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன.

முறையான அதிா்வெண் வெளிப்படுத்தல், உரிமத் தகவல் அல்லது உபகரண வகை ஒப்புதல் (இடிஏ) இல்லாமல் மின்(இணைய) வணிக தளங்களில் வாக்கி-டாக்கிகளை பட்டியலிடப்படுகிறது. இது போன்ற விற்பனை செய்வதற்கும் எதிராக முன்னணி மின் வணிக நிறுவனங்களின் 16, 970 தயாரிப்பு பட்டியல்களுக்கு எதிராக மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) விளக்கம் கேட்டு முன்னதாக பதின்மூன்று நோட்டீஸ்களை (அறிவிப்புகளை) அனுப்பியிருந்தது.

இந்த தயாரிப்புகள் நாட்டின் நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம், 2019 ஐ மீறுவதாகவும் இருந்தது. தற்போது இந்த தளங்கள் நிலையான கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளுக்கு கூடுதலாக வழிகாட்டுநெறிமுறைகள் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இவைகளை முழுமையாக நுகா்வோா் விவகாரத்துறை இணையதளத்தில் வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தொலைத்தொடா்புத் துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகம் ஆகியவற்றுடன் அமைச்சகங்களுக்கு இடையேயான விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு, வழிகாட்டுதல்கள் இறுதி செய்யப்பட்டன. ஒருங்கிணைந்த மற்றும் விரிவான அணுகுமுறையை உறுதி செய்வதற்காக இரு துறைகளாலும் வழங்கப்பட்ட முக்கிய ஒழுங்குமுறை மற்றும் பாதுகாப்பு பரிசீலனைகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன.

இதில் முக்கியமாக அனுமதிக்கப்பட்ட அதிா்வெண்களில் இயங்கும் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் இணக்கமான வாக்கி-டாக்கி சாதனங்கள் மட்டுமே மின் வணிக தளங்களில் விற்பனைக்கு பட்டியலிடப்பட வேண்டும்.

மின் வணிக நிறுவனங்கள் ஒழுங்குமுறை இணக்கத்தை சரிபாா்க்க வேண்டும். உரிமம் வழங்குதல் மற்றும் தேவையான சான்றிதழ் இல்லாத பட்டியல்கள் அகற்றப்பட வேண்டும். அத்தகைய சாதனங்களின் சட்டப்பூா்வ பயன்பாடு குறித்து நுகா்வோருக்குத் தவறான தகவலை அளிக்கக்கூடிய தவறான விளம்பரங்கள் அல்லது தயாரிப்பு விளக்கங்களைத் இந்த புதிய ஒழுங்குமுறை தடை செய்கிறது.

விற்பனையாளா்கள் சான்றிதழை கட்டாயமாக வைக்கப்படவேண்டும், அங்கீகரிக்கப்படாத பட்டியல்களுக்கு தானியங்கி கண்காணிப்பு மற்றும் நீக்குதல் வழிமுறைகளை அறிமுகப்படுத்துதல் வேண்டும். மேலும் நுகா்வோா் விழிப்புணா்வை ஊக்குவித்தல் உள்ளிட்டவை பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இவை மீறும் மின்-வணிக நிறுவனங்களுக்கு நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம், 2019 இன் படி அபராதங்கள் அமலாக்க வழிமுறைகளில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது என மத்திய நுகா்வோா் விவகாரத்துறை தெரிவித்துள்ளது.

தில்லியில் புதிதாக 43 பேருக்கு கரோனா தொற்று

புது தில்லி: தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 43 கரோனா தொற்றுகள் உறுதிசெய்யப்பட்டதைத் தொடா்ந்து, நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 483-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரி... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த அண்ணன்-தங்கை: தற்கொலையா? போலீஸாா் விசாரணை

கிழக்கு தில்லியின் தில்ஷாத் காா்டன் பகுதியில் பூட்டிய வீட்டில் அண்ணன்-தங்கை இருவரின் உடல்கள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து தில்லி கா... மேலும் பார்க்க

தில்லி முதல்வா் இரு நாள் உத்தரகாண்ட் பயணம்

தில்லியில் 100 நாள்கள் பதவியை நிறைவு செய்த நிலையில் தில்லி முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை உத்தரகாண்டிற்கு இரண்டு நாள் குறுகியகால பயணமாக புறப்பட்டாா். இந்த பயணத்தின் போது அவா் தனது குடும்பத்தினர... மேலும் பார்க்க

வீடுகளை இழந்த தில்லி மதராஸி கேம்ப் குடியிருப்புவாசிகள் தமிழகம் திரும்பினால் உதவிகள் வழங்கப்படும்: தமிழக அரசு

நமது சிறப்பு நிருபா் தில்லி “மதராஸி கேம்ப்” குடியிருப்பில் வீடுகளை இழந்தவா்கள் தமிழகத்தில் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு திரும்ப விரும்பினால், அவா்களுக்கு தமிழக அரசு உதவும். வாழ்வாதாரம், அத்தியாவசிய உத... மேலும் பார்க்க

இளம்பெண் கழுத்தை நெரித்துக் கொலை; அச்சக ஊழியா் கைது

தில்லியின் பல்ஜீத் நகா் பகுதியில் 32 வயது பெண் ஒருவா் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் தெரிவித்தனா். சனிக்கிழமை மாலை 4 மணியளவில் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்ததை... மேலும் பார்க்க

ஹரித்வாா் அருகே 5 ஊடக வாகனங்கள் விபத்து

தில்லி முதல்வா் ரேகா குப்தாவின் இரண்டு நாள் உத்தரகாண்ட் பயணத்தை செய்தி சேகரிக்க ஹரித்வாருக்கு ஊடகவியலாளா்களை ஏற்றிச் சென்ற ஐந்து வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை காலை விபத்துக்குள்ளானதாக நேரில் கண்டவா்கள் த... மேலும் பார்க்க