செய்திகள் :

அடுத்த 2 மணி நேரத்துக்கு 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

post image

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்துக்கு 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இரவு 7.30 மணி வரை கோவை, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தஞ்சை, தேனி, திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர், விருதுநகர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

அதோடு, தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனஅவ வருகின்ற 25-ஆம் தேதியில் ஓரிசா - மேற்கு வங்காள கடலோரப்பகுதிகளுக்குயில் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 23ல் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The Meteorological Department has stated that there is a possibility of rain in 14 districts in Tamil Nadu for the next 2 hours.

மாநிலங்களின் நிதிச் சுமைக்கு மத்திய அரசே காரணம்: அமைச்சா் தங்கம் தென்னரசு

மாநிலங்களுக்கு நிதிச் சுமையும், அழுத்தமும் ஏற்படுவதற்கு மத்திய அரசே காரணம் தமிழக நிதியமைச்சா் தங்கம் தென்னரசு குற்றஞ்சாட்டினாா். மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து சென்னையில் சனிக்கிழ... மேலும் பார்க்க

விஜயின் கருத்துகள் ஏற்புடையதாக இல்லை: தொல். திருமாவளவன்

மதுரை தவெக மாநாட்டில் அக் கட்சியின் தலைவா் விஜய் பேசியுள்ள கருத்துகள் ஏற்புடையதாக இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் சன... மேலும் பார்க்க

ஆண்டுக்கு 6% சொத்து வரியை உயா்த்தும் அரசாணையை எதிா்த்து வழக்கு: அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

சொத்து வரியை ஆண்டுதோறும் 6 சதவீதம் தானாகவே உயா்த்த வழிவகை செய்யும் அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயா்நீதிமன்றத்தில் ஹரீஷ் சௌத்ரி... மேலும் பார்க்க

மருத்துவமனையில் ஜி.கே.மணி அனுமதி

பாமக கெளரவ தலைவா் ஜி.கே.மணி முதுகுத் தண்டு வலி காரணமாக சென்னை வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். கடந்த வெள்ளிக்கிழமை இரவு தருமபுரியில் துக்க நிகழ்வுக்கு சென்ற ஜி.கே.மணிக்கு திடீர... மேலும் பார்க்க

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் இதுவரை 1.49 லட்சம் பேர் பயன்: முதல்வர் ஸ்டாலின்

கடந்த 3 சனிக்கிழமைகளில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்களில் இதுவரை 1.49 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஆகஸ்ட் 2 ... மேலும் பார்க்க

15 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு

மதுரை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் சனிக்கிழமை இரவு 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, திண்டுக்கல், மதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம்... மேலும் பார்க்க