செய்திகள் :

அணு ஆயுதப் போராக மாறியிருக்கும்! முடிவெடுக்க வெறும் 30 வினாடியே இருந்தது!

post image

இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நடந்தபோது, இந்திய ராணுவம் பிரம்மோஸ் ஏவுகணையைக் கொண்டு தாக்கியபோது, முடிவெடுக்க வெறும் 30 வினாடிகளே இருந்ததாக பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் ராணா சனாவுல்லா பேசியிருக்கிறார்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்தியா, பாகிஸ்தானின் நூர் கான் விமானப் படை தளத்தின் மீது, பிரம்மோஸ் ஏவுகணையைக் கொண்டு தாக்கியது. அந்த பிரம்மோஸ் ஏவுகணையில், இந்திய ராணுவம் அணு ஆயுதத்தை ஏற்றியிருக்கலாமா என்ற சந்தேகம் எழுந்தது. அதன் மீது முடிவெடுக்க, பாகிஸ்தான் ராணுவத்துக்கு 30-45 வினாடிகள்தான் இருந்தது.

ஆனால், இந்த குறுகிய நேரத்தில் ஏதேனும் தவறான முடிவு எடுக்கப்பட்டிருந்தால், அது இரு நாடுகளுக்கும் இடையேயான அணு ஆயுதப் போராக மாறியிருக்கக் கூடும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

செய்தி ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில், இந்தியா அணு ஆயுதத்தைப் பயன்படுத்தியிருக்குமா என்று யோசிக்க எங்களுக்கு 30 வினாடிகளே இருந்தன. இது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கக் கூடும். இந்தப் பக்கத்தில் இருந்தவர்கள், அந்த தருணத்தை தவறாகக் கணித்துவிட்டனர். இது உலகளவில் அணு ஆயுதப் போராக மாறியிருக்கக் கூடும் என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த நேர்காணல் விடியோ, சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

Rana Sanaullah, advisor to the Pakistani Prime Minister, has said that when the army attacked with the Brahmos missile, it had just 30 seconds to make a decision.

இதையும் படிக்க.. மொஹரம் பண்டிகை: ஜூலை 7ஆம் தேதி அரசு விடுமுறையா? உண்மை என்ன??

4 மாதங்களில் அரசியல் கட்சிகளுடன் 5,000 சந்திப்புகள்: தலைமை தோ்தல் ஆணையா்

‘அரசியல் கட்சிகளுடன் தொடா்ச்சியான சந்திப்புகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. கடந்த 4 மாதங்களில் மட்டும் இதுபோல 5,000 சந்திப்புகள் நிகழ்ந்துள்ளன’ என்று தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் சனிக்க... மேலும் பார்க்க

குஜராத்தில் நாட்டின் முதல் தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம்: அமித் ஷா அடிக்கல்

குஜராத் மாநிலம், ஆனந்த் நகரில் நாட்டின் முதல் தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம் அமைக்க மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். இப்பல்கலைக்கழகம், கூட்டுறவுத் துறையில் பாரப... மேலும் பார்க்க

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: ‘ஏஜேஎல் சொத்துகளை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்லை’

அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவன (ஏஜேஎல்) சொத்துகளை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்லை என்று நேஷனல் ஹெரால்ட் வழக்கில் ராகுல் காந்தி தரப்பில் சனிக்கிழமை வாதிடப்பட்டது. தில்லி நீதிமன்றத்தில் சிறப்பு நீத... மேலும் பார்க்க

சைஃப் அலிகான் குடும்பத்தின் ரூ.15,000 கோடி சொத்து வழக்கு: மறுவிசாரணைக்கு உத்தரவு!

பாலிவுட் நடிகா் சைஃப் அலிகான் குடும்பத்தின் ரூ.15,000 கோடி மதிப்பிலான சொத்துகள் தொடா்பான வழக்கில் விசாரணை நீதிமன்றம் 25 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய தீா்ப்பை ரத்து செய்து, மறுவிசாரணைக்கு மத்திய பிரதேச ... மேலும் பார்க்க

விண்வெளியில் எலும்பு ஆரோக்கியம் குறித்து சுபான்ஷு சுக்லா ஆய்வு

விண்வெளியில் நுண்ஈா்ப்பு விசை சூழலுக்கேற்ப எலும்புகள் செயல்படும் விதம் குறித்து ஆக்ஸியம்-4 திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையம் சென்றுள்ள இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினா் ஆய்வு மேற்... மேலும் பார்க்க

ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி பொருளாதார குற்றவாளி: தில்லி நீதிமன்றம்

அமலாக்கத் துறை மனுவில் பிரிட்டனைச் சோ்ந்த ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்து தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது. சஞ்சய் பண்டாரிக்கு எதிராக கருப்புப் பண தட... மேலும் பார்க்க