செய்திகள் :

அண்ணாமலை, வானதி, தமிழிசை உள்ளிட்டோர் கைது - வீட்டுக் காவலில் பாஜக-வினர் | என்ன காரணம்?

post image

தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையின் முடிவில், ரூ.1000 கோடி அளவில் ஊழல் நடந்தது என குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து 17 ஆம் தேதி(இன்று) சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமையகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.

பாஜக நிர்வாகிகளை வீட்டுக் காவலில் வைக்கும் போலீஸ்

இந்நிலையில், சென்னை தியாகராய நகர் பகுதியில் வசித்து வரும் பாஜக பிரமுகர் வினோஜ் பி செல்வம் காலையில் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக மாநில செயலாளர் வினோஜ் செல்வத்தின் ஒருங்கிணைப்பில் போராட்டம் நடத்த அண்ணாமலை உத்தரவிட்டு இருந்தார். மேலும் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு குவியும் பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.

அதேபோல வானதி சீனிவாசன், போராட்டத்திற்கு கிளம்பிய தமிழிசை சௌந்தர்ராஜன் ஆகியாரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

"டாஸ்மாக் ஊழலை வெளிக்கொண்டு வருவதில் நாங்கள் சுணங்க மாட்டோம். மக்களுக்காக நாங்கள் போராடுவோம். இது ஜனநாயக நாடு எங்களை தடுக்க முடியாது" என்று தமிழிசை தெரிவித்திருக்கிறார்.

பாஜக நிர்வாகிகளை வீட்டுக் காவலில் வைக்கும் போலீஸ்

இந்நிலையில் டாஸ்மாக் ஊழல் புகார் தொடர்பான போராட்டத்திற்கு செல்லும் வழியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இதனைதொடர்ந்து செய்தியளர்களிடம் பேசிய அவர், "நானோ பாஜக நிர்வாகிகளோ பேசக் கூடாது என தமிழ்நாடு அரசு நினைக்கிறது. நாங்கள் பேசினால் உண்மைகள் வெளிவந்துவிடும் என்பதால் எங்களை கைது செய்கிறார்கள். தேதியை அறிவிக்காமல் போராட்டம் நடத்தினால் என்ன செய்வார்கள். தேவையெனில் முதல்வர் வீட்டையும் முற்றுகையிடுவோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Canada: கனடாவின் புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண்கள்; யார் இவர்கள்?

கனடாவின் புதிய பிரதமர்கார்னியின்அமைச்சரவையில் அனிதா ஆனந்த் பொருளாதார முன்னேற்றம், அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான (Innovation) அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். கமலா கேரா சுகாதாரத்துறை அமைச்சராக இட... மேலும் பார்க்க

America: வெனிசுலா மக்களைச் சிறையிலடைத்த அமெரிக்கா; "கடைசியாக போனில் பேசும்போது.." - ஒரு தாயின் அழுகை

அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமல் குடியேறியவர்களை வெளியேற்றும் நிகழ்வு தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது. இது இதற்கு முன்னரும் நடந்திருந்தாலும், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதற்குப் பின்னர், ... மேலும் பார்க்க

Railway Exams: தமிழகத் தேர்வர்களுக்கு வெளிமாநிலத்தில் மையம்; ரயில்வே சொல்லும் காரணம் என்ன?

ரயில்வே தேர்வு வாரியம் (RRB) மூலம் நடத்தப்படும் ஏ.எல்.பி (Assiaitant Loco Pilot) பணிக்கான தேர்விற்கு விண்ணப்பித்த தமிழகத்தைச் சேர்ந்த 80 சதவீதம் தேர்வர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்ப... மேலும் பார்க்க

Aurangzeb: "பட்னாவிஸ் ஒளரங்கசீப்பைப் போல..." - காங். தலைவர் பேச்சு; மகாராஷ்டிராவில் வெடித்த சர்ச்சை

மொகலாய மன்னர் ஔரங்கசீப் தனது கடைசிக் காலத்தில் மகாராஷ்டிராவில்தான் வாழ்ந்து மறைந்தார். அவரது உடல் தற்போது சாம்பாஜி நகர் மாவட்டத்தில்தான் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது கல்லறையை அகற்ற வேண்டும் என்ற க... மேலும் பார்க்க

கல்வி, வேலைவாய்ப்பு, சொத்துடைமை... இந்தியாவில் இஸ்லாமியர் நிலை பற்றிய புதிய அறிக்கை சொல்வது என்ன?

இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கான அரசின் திட்டங்கள், நடவடிக்கைகள் குறித்து ’Rethinking Affirmative Action for Muslims in Contemporary India’ என்ற அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மத சிறுபான்மையினரின் பொருளாத... மேலும் பார்க்க

``ராஜேந்திர பாலாஜி வழக்கு விசாரணையை ஆளுநர் வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறார்" - உச்ச நீதிமன்றம்

அதிமுக ஆட்சிக் காலத்தில் (2016 - 2021) தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டு மூன்று கோடி ரூபாய் வரை சேர்த்ததாகப் புகார்கள் எழுந்தது... மேலும் பார்க்க