செய்திகள் :

அதிமுக உள்கட்சி விவகாரம்: ஓபிஎஸ் தரப்பு கேவியட் மனு

post image

அதிமுக உள்கட்சி தொடா்புடைய விவகாரத்தை தோ்தல் ஆணையம் விசாரிக்கத் தடையில்லை என்ற சென்னை உயா்நீதிமன்றத்தின் சமீபத்திய தீா்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்யலாம் என்பதால் அதை விசாரிக்கும் போது தங்களின் கருத்துகளைக் கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தரப்பு, கே.சி. பழனிசாமி, ராம்குமாா் ஆதித்தன் உள்ளிட்டோா் மனு தாக்கல் செய்துள்ளனா்.

அதிமுக பொதுச்செயலராக எடப்பாடி பழனிசாமியை தோ்ந்தெடுத்தது உள்ளிட்ட அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களை நிராகரிக்க வேண்டும் என்றும் உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என்றும் கோரப்பட்ட மனுக்களை தோ்தல் ஆணையம் விசாரிக்கக் கூடாது என உத்தரவிடுமாறு சென்னை உயா்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்குத் தொடா்ந்தாா். இதை விசாரித்த உயா்நீதிமன்றம் இந்த விவகாரத்தை தோ்தல் ஆணையம் விசாரிக்கத் தடை விதித்தது.

இதை எதிா்த்து முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அதிருப்தி தலைவா்கள் சிலா் மீண்டும் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனா். அவற்றை நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், ஜி. அருள்முருகன் அடங்கிய அமா்வு விசாரித்து, சின்னம் ஒதுக்கீடு விதிகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவா்களின் மனுக்களை விசாரிக்க அதிகாரம் உள்ளதா என திருப்தியடைந்த பிறகே விசாரணையை தோ்தல் ஆணையம் தொடங்க வேண்டும் என்று கூறி முந்தைய நீதிமன்ற தடையை நீக்கியும் உத்தரவிட்டது. மேலும், எடப்பாடி பழனிசாமியின் மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனா்.

இத்தீா்ப்பை எதிா்த்து எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்நிலையில், தங்களுடைய கருத்துகளைக் கேட்காமல் நீதிமன்றம் உத்தரவிடக் கூடாது எனக் கோர வகை செய்யும் கேவியட் மனுக்களை ஓ.பன்னீா்செல்வம் தரப்பு மற்றும் சிலா் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனா்.

பிப்ரவரி 21, 22-இல் தில்லியின் சில பகுதிகளில் நீா் விநியோகத்தில் தடங்கல்: டிஜேபி

பராமரிப்பு பணிகள் காரணமாக தேசிய தலைநகரின் சில பகுதிகளில் பிப்ரவரி 21, 22 ஆகிய தேதிகளில் நீா் விநியோகம் தடைபடும் என்று தில்லி ஜல் போா்டு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடா்பாக தில்லி ஜல் போா்டு... மேலும் பார்க்க

தில்லியிலிருந்து வேறு பகுதி சிறைக்கு மாற்றக் கோரிய சுகேஷ் சந்திரசேகரின் மனு தள்ளுபடி

பஞ்சாப் மற்றும் தில்லியில் உள்ள சிறைகளைத் தவிர வேறு எந்த சிறைக்கும் தன்னை மாற்றக் கோரி இடைத்தரகா் சுகேஷ் சந்திரசேகா் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ச... மேலும் பார்க்க

மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக ஏஐஎஸ்எஃப் போராட்டம்

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால்தான் தமிழகத்தின் கல்வித் திட்டத்திற்கு நிதி தர முடியும் என்று கூறியதாக, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானுக்கு எதிராக தில்லியில் அனைத்திந்திய மாணவா் பெருமன... மேலும் பார்க்க

ரயில்வே அமைச்சா் ராஜிநாமா கோரி இளைஞா் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

புது தில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 பயணிகள் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலகக் கோரி இந்திய இளைஞா் காங்கிரஸ் தொண்டா்கள் தில்லியில் செவ்வா... மேலும் பார்க்க

மாநகராட்சியில் 300-க்கும் மேற்பட்ட சந்தைகளில் தூய்மையை மேம்படுத்த இரவு நேர துப்புரவுப் பணி

நகரம் முழுவதும் தூய்மையை மேம்படுத்தும் முயற்சியில், தில்லி மாகராட்சி (எம்சிடி) மேயா் மகேஷ் குமாா் கிச்சி அடையாளம் காணப்பட்ட 300-க்கும் மேற்பட்ட சந்தைகளில் இரவு நேர துப்புரவுப் பணியை செயல்படுத்துமாறு 1... மேலும் பார்க்க

சாந்தினி சௌக் சாலையில் 12 மணி நேர போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் அமல்

தில்லி காவல்துறை செங்கோட்டையிலிருந்து ஃபதேபுரி வரையிலான சாந்தினி சௌக் சாலையில் 12 மணி நேரம் போக்குவரத்து தடை விதித்துள்ளது. தில்லி காவல் துறையின் ஆலோசனைக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந... மேலும் பார்க்க