செய்திகள் :

``அந்த அறையில் பணம் வைத்ததே இல்லை!'' - தன் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பணம் குறித்து நீதிபதி பதில்

post image

கடந்த வாரம், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அவர் அந்த நேரத்தில் வீட்டில் இல்லை. இதனால், தீயணைப்பு துறையின் உதவியை நாடியுள்ளது அவரது குடும்பம்.

தீயணைப்பு முடித்ததும், தீயணைப்பு வீரர்கள் அவரது வீட்டில் கட்டு கட்டான பணத்தை கண்டுள்ளனர். இதனையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிகப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பேச கூடிய இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான கூட்டத்தில், 'யஷ்வந்த் வர்மா முன்பு வேலை பார்த்த அலகாபாத் நீதிமன்றத்திற்கே, அவரை மீண்டும் பணி மாறுதல் செய்வதற்கும், அவர் மீது விசாரணை நடத்திடவும்' முடிவு செய்யப்பட்டது.

டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாய்
டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாய்

விளக்கக் கடிதம்

சம்பவம் குறித்து டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாய்யிடன் நீதிபதி யஷ்வந்த் வர்மா கொடுத்த விளக்கக் கடிதத்தில், "பணம் கண்டுபிடிக்கப்பட்ட குறிப்பிட்ட அறை அனைவராலும் பயன்படுத்தப்படும் ஒரு அறை ஆகும். பயன்படுத்தாத நாற்காலிகள், பாட்டில்கள், பாத்திரங்கள், தோட்டக் கருவிகள் ஆகியவற்றை போட்டு வைக்கும் அறை ஆகும்.

அது ஒரு பூட்டப்படாத அறை. அந்த அறைக்கு முன்பக்க கதவு மூலமும், பணியாளர்கள் குடியிருப்பிற்கு பின் இருந்தும் வந்துப்போக முடியும். அதனால், இது என்னுடைய வீட்டின் அறை என்று கூறப்பட்டது போல இல்லை.

ஊரில் இல்லை!

இந்த சம்பவம் நடந்தப்போது நானும், என் மனைவியும் மத்திய பிரதேச சென்றிருந்தோம். என்னுடைய மகள் மற்றும் வயதான அம்மா மட்டுமே வீட்டில் இருந்தனர். மார்ச் 15-ம் தேதி தான், என் மனைவியுடன் டெல்லிக்கு திரும்பினேன்.

தீ விபத்து நடு இரவில் நடந்தபோது, என்னுடைய மகள் மற்றும் என்னுடைய தனி செயலாளர் இருவரும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தீயை அணைக்க, என் குடும்ப உறுப்பினர்களை வெளியில் இருக்க கூறியுள்ளனர் தீயணைப்பு வீரர்கள். தீயணைப்பு முடிந்து, அவர்கள் வீட்டிற்குள் வந்தப்போது, அப்படி எந்தவொரு பணத்தையும் என் குடும்பத்தினர் பார்க்கவில்லை.

நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட எரிந்த பணக்கட்டுகள்
நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட எரிந்த பணக்கட்டுகள்

நம்ப முடியாத ஒன்று

நானோ, என் குடும்ப உறுப்பினர்களோ யாரும் அந்த அறையில் இதுவரை எந்த பணத்தையும் வைத்ததில்லை. அதனால், அந்தப் பணம் என்னுடையது என்று கூறுவதை முற்றிலும் மறுக்கிறேன். பூட்டப்படாத, அனைவரும் வந்துப்போகும், திறந்த ஒரு அறையில் பணத்தை வைப்பது என்பது நம்ப முடியாத ஒன்று.அந்த அறைக்கும் எனது வீட்டிற்கும் சம்பந்தமே இல்லை.

விசாரணை வேண்டும்

என்னுடைய பெயரைக் கெடுக்கவே இப்படி ஒரு சம்பவம் நடத்தப்பட்டு உள்ளது. இந்த மாதிரியான எந்தப் புகாரும், சந்தேகமும் என் மீது முன்னர் வந்ததில்லை. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.

இவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்ட வீடியோவை தற்போது இந்திய தலைமை நீதிபதி மற்றும் டெல்லி கமிஷனர் வெளியிட்டுள்ளனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

`பாரதியார் இல்லத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வர வேண்டாம்’ - ஆட்சியர் அறிவிப்பு; காரணம் என்ன?

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வரலாற்று பக்கத்தில் மிக நீண்ட பாரம்பரியத்தை கொண்டது. ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் மிகப்பெரிய பாளையமாகவும் எட்டப்ப நாயக்கர்களால் ஆட்சி செய்யப்பட்ட பகுதியாகவு... மேலும் பார்க்க

RTI: உள்ளே நுழையும் DPDP act பிரிவு 44 (3); பறிபோகும் ஆர்.டி. ஐ உரிமை... பிரச்னை என்ன? | Explainer

`மத்திய பட்ஜெட் - 2025' மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு, வக்பு வாரிய விவகாரம் போன்ற விஷயங்களில் மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் பல கேள்விகளை எழுப்பி வர... மேலும் பார்க்க

"அன்று இபிஎஸ் சொன்ன வார்த்தை; அவராகவே பதவி விலகுவதுதான் மரியாதை" - ஓ.பி.எஸ் பதிலடி

தூத்துக்குடியில் இன்று (மார்ச் 27) செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, " 'அ.தி.மு.க'வில் ஓ.பன்னீர் செல்வத்தை இணைக்க வாய்ப்பில்லை. பிரிஞ்சது, பிரிஞ்சதுதான். இனி அவரை சேர்ப்பதற்கு வாய்ப்பேயில்ல... மேலும் பார்க்க

மீனவர்கள் 11 பேர் கைது; இரு நாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் தொடரும் சிறைபிடிப்பு!

பாரம்பரிய மீன்பிடிப்பு பகுதியான மன்னார் வளைகுடா கடல் பரப்பில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து சிறை பிடித்து வருகிறது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிப்பது பல ஆண... மேலும் பார்க்க

Ilaiyaraaja: `இளையராஜாவுக்கு பாராட்டு விழா' - தேதியை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்

லண்டனில் கடந்த மாதம் மார்ச் 8-ம் தேதி 'சிம்பொனி 01 'Valiant'' சிம்பொனியை இசையமைப்பாளர் இளையராஜா அரங்கேற்றம் செய்திருந்தார்.லண்டனுக்குச் செல்லும் முன், இந்தியாவிலிருந்து தமிழர் ஒருவர் பண்ணைப்புரம் கிரா... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணி; மீண்டும் ஓபிஎஸ்..? - எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன?

2021 சட்டமன்றத் தேர்தலில் 'பா.ஜ.க'வுடன் கூட்டணி வைத்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க, பல சிக்கல்களால் பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாதுஎன்று சமீபமாக கூறிவந்தது. இருப்பினும் 2026 சட்டமன்றத் தேர்தல்... மேலும் பார்க்க