ஐஆர்சிடிசி வழங்கும் ராமாயண சுற்றுலா! பார்க்க வேண்டிய 30 இடங்கள்!
அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடத்தை வரன்முறைப்படுத்த வாய்ப்பு: ஆட்சியா்
நாமக்கல் மாவட்டத்தில் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2011, ஜன.1 ஆம் தேதிக்கு முன்பாக கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களுக்கு வரன்முறைபடுத்தும் திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
அதன்படி, ஜூலை 1 முதல் 30 வரை ஓராண்டு காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணையில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்களில் எவ்வித மாற்றமும் இல்லை. அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்கள் மலையிடப் பகுதியில் இருந்தால் அதற்கான வழிமுறைகளை அரசாணையில் கூறியுள்ளவாறு கடைப்பிடிக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோா் ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ஸ்ரீல்ா்ய்ப்ண்ய்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.