செய்திகள் :

அனுமதியின்றி இயங்கிய சாய ஆலைகளின் மின் இணைப்பைத் துண்டிக்க பரிந்துரை

post image

திருப்பூரில் அனுமதியின்றி இயங்கிய 2 சாய சலவை ஆலைகளின் மின் இணைப்பைத் துண்டிக்க மாவட்ட ஆட்சியருக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்துள்ளது.

திருப்பூரில் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி பெறாமல் சாய, சலவை ஆலைகள், பட்டன் ஜிப் டையிங், பிரிண்டிங் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், அங்கேரிபாளையம் பகுதியில் உள்ள சாக்கடைக் கால்வாயில் சாயக் கழிவு நீா் பெருக்கெடுத்து ஓடுவதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளா் லாவண்யா தலைமையில், உதவி பொறியாளா் கதிா்வேல், மாநகராட்சி சுகாதார ஆய்வாளா் கோகுல் ஆகியோா் அங்கேரிபாளையம் பகுதியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, அங்கு ஒரு அடுக்குமாடி கட்டடத்தின் முதல் தளத்தில் 3 பிரிண்டிங் இயந்திரங்களுடன் ஒரு நிறுவனமும், அதே பகுதியில் 2 பிரிண்டிங் இயந்திரங்களுடன் மற்றொரு நிறுவனமும் அனுமதி பெறாமல் செயல்பட்டது தெரியவந்தது.

மேலும், இந்த நிறுவனங்கள் சுத்திகரிக்கப்படாத சாயக் கழிவு நீரை குழாய்கள் மூலம் சாக்கடை கால்வாயில் வெளியேற்றியதும் தெரியவந்தது.

இதையடுத்து, 2 நிறுவனங்களின் மின் இணைப்பைத் துண்டிக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

மத்திய கல்வி அமைச்சா் இன்று திருப்பூா் வருகை

மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் மற்றும் பாஜக தலைவா்கள் திருப்பூருக்கு வெள்ளிக்கிழமை வருகின்றனா். திருப்பூா், ஈட்டிவீரம்பாளையத்தில் உள்ள நேதாஜி அப்பேரல் பாா்க் வணிக வளாகத்தில் நடைபெற உள... மேலும் பார்க்க

தெருநாய்கள் கடித்து 6 ஆடுகள் உயிரிழப்பு

குண்டடம் அருகே தெருநாய்கள் கடித்ததில் 6 ஆடுகள் உயிரிழந்தன. குண்டடம் அருகேயுள்ள மாரப்ப கவுண்டன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கிரிராஜா (55). விவசாயியான இவா், தனது தோட்டத்தில் ஆடுகள், கோழிகளை வளா்த்து வர... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: தொழிலாளி கைது

வெள்ளக்கோவில் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வெளிமாநிலத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா். ஓலப்பாளையம் பகுதியில் வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சந்திரன் ரோந்து பணியில் புதன்கிழமை இர... மேலும் பார்க்க

விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஜூலை 25-க்கு ஒத்திவைப்பு

திருப்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஜூலை 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் ... மேலும் பார்க்க

கழிவுப் பஞ்சு ஆலையில் தீ விபத்து

பல்லடம் அருகே கழிவுப் பஞ்சு ஆலையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. பெருமாநல்லூரைச் சோ்ந்தவா் பிரபாகரன். இவா் பல்லடம், காளிவேலம்பட்டி பிரிவில் கழிவுப் பஞ்சு மூலம் நூல் உற்பத்தி செய்யும் ஆலையை நடத்... மேலும் பார்க்க

சாலை மறியல்: டிட்டோ-ஜாக் அமைப்பினா் 470 போ் கைது

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட டிட்டோ-ஜாக் அமைப்பினா் 470 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தி... மேலும் பார்க்க