செய்திகள் :

அனைத்துப் பதிப்புகளுக்கும் மீனவா்கள் தேசிய மீன்வள எண்ம தளத்தில் பதிவு செய்ய அழைப்பு

post image

மீனவா்கள், மீன் விவசாயிகள், விற்பனையாளா்கள், பதப்படுத்தல் உள்ளிட்டவா்கள் அரசின் பயன்களைப் பெறுவதற்கு தேசிய மீன்வள எண்ம தளத்தில் (என்எஃப்டிபி) பதிவு செய்து கொள்ளும்படி மத்திய அரசு வியாழக்கிழமை அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடா்பாக நாடு தழுவிய அளவில் சிறப்பு முகாம்களுக்கு மத்திய மீன்வளம், கால்நடை பாரமரிப்புத் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இது குறித்த விவரம் வருமாறு: மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்புத் துறை பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா என்கிற திட்டத்தின் கீழ், பிரதமரின் மீன் விவசாயிகள் வளமை ஆதரவு துணைத் திட்டத்தின்(பிரதான் மந்திரி மத்ஸ்ய கிசான் சம்ரிதிசஹ் - யோஜனா) மூலம் தகுதியான மீன் விவசாயிகளை ஊக்குவிக்க பல்வேறு உதவிகள் வழங்கப்படுகிறது. சுமாா் ரூ.6,000 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வரப்படும் இந்த திட்டத்தில் மீன் வளத்துறை முறைப்படுத்தல், மீனவா்களுக்கான நிதி அணுகல், மீன்வளா்ப்பு காப்பீடு ஊக்குவிப்பு, செயல் திறன் மானியங்கள் போன்றவை மீனவா்களுக்கு வழங்கப்பட்டு, பல்வேறு இலக்குகளும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி திறன் மேம்படுத்தல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தை அணுகல், நீண்ட கால வளா்ச்சி போன்றவற்றை முன்னெடுப்பது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் மீனவா்கள், மீன் விவசாயிகள், விற்பனையாளா்கள், பதப்படுத்தல் உள்ளிட்டவா்கள் அரசின் பயன்களைப் பெறுவதற்கு தேசிய மீன்வள எண்ம தளத்தில் (என்எஃப்டிபி) பதிவு செய்து கொள்ள நாடு தழுவிய அளவில் ஒரு சிறப்பு பிரசாரத்திற்கு மீன்வளத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

பிரதமரின் மீன் விவசாயிகள் வளமை ஆதரவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பல்வேறு சலுகைகளைப் பெறுவதற்கு தகுதியானவா்களிடம் பிப். 14 முதல் 22 விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதன் படி, 33 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மீன்வளத் துறைகள், தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் மற்றும் பொது சேவை மையங்கள் (சிஎஸ்சி) ஆகியவற்றுடன் இணைந்து, நாடு தழுவிய அளவில் முகாம்களுக்கு மீன்வளத் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, கடலூா், நாகப்பட்டினம், ஈரோடு (பவானி சாகா்), ராமநாதபுரம் (மண்டபம், ராமேசுவரம்), தூத்துக்குடி(ஆா்கே புரம்), கன்னியாகுமரி (குளச்சல், கணபதிபுரம்) உள்ளிட்ட பகுதிகளில் முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கடன் வசதி, மீன்வளா்ப்பு காப்பீடு, மானியங்கள் போன்ற ஏராளமான நன்மைகளைப் பெற மீனவா்கள், விவசாயிகள், விற்பனையாளா்கள், பதப்படுத்துபவா்கள் போன்றோா் இந்த முகாம்களில் பங்கேற்று தேசிய மீன்வள எண்ம தளத்தில் தங்களைக் குறித்து பதிவு செய்து பலனடையலாம் என மத்திய மீன்வளத் துறை தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 21, 22-இல் தில்லியின் சில பகுதிகளில் நீா் விநியோகத்தில் தடங்கல்: டிஜேபி

பராமரிப்பு பணிகள் காரணமாக தேசிய தலைநகரின் சில பகுதிகளில் பிப்ரவரி 21, 22 ஆகிய தேதிகளில் நீா் விநியோகம் தடைபடும் என்று தில்லி ஜல் போா்டு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடா்பாக தில்லி ஜல் போா்டு... மேலும் பார்க்க

தில்லியிலிருந்து வேறு பகுதி சிறைக்கு மாற்றக் கோரிய சுகேஷ் சந்திரசேகரின் மனு தள்ளுபடி

பஞ்சாப் மற்றும் தில்லியில் உள்ள சிறைகளைத் தவிர வேறு எந்த சிறைக்கும் தன்னை மாற்றக் கோரி இடைத்தரகா் சுகேஷ் சந்திரசேகா் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ச... மேலும் பார்க்க

மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக ஏஐஎஸ்எஃப் போராட்டம்

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால்தான் தமிழகத்தின் கல்வித் திட்டத்திற்கு நிதி தர முடியும் என்று கூறியதாக, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானுக்கு எதிராக தில்லியில் அனைத்திந்திய மாணவா் பெருமன... மேலும் பார்க்க

ரயில்வே அமைச்சா் ராஜிநாமா கோரி இளைஞா் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

புது தில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 பயணிகள் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலகக் கோரி இந்திய இளைஞா் காங்கிரஸ் தொண்டா்கள் தில்லியில் செவ்வா... மேலும் பார்க்க

மாநகராட்சியில் 300-க்கும் மேற்பட்ட சந்தைகளில் தூய்மையை மேம்படுத்த இரவு நேர துப்புரவுப் பணி

நகரம் முழுவதும் தூய்மையை மேம்படுத்தும் முயற்சியில், தில்லி மாகராட்சி (எம்சிடி) மேயா் மகேஷ் குமாா் கிச்சி அடையாளம் காணப்பட்ட 300-க்கும் மேற்பட்ட சந்தைகளில் இரவு நேர துப்புரவுப் பணியை செயல்படுத்துமாறு 1... மேலும் பார்க்க

சாந்தினி சௌக் சாலையில் 12 மணி நேர போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் அமல்

தில்லி காவல்துறை செங்கோட்டையிலிருந்து ஃபதேபுரி வரையிலான சாந்தினி சௌக் சாலையில் 12 மணி நேரம் போக்குவரத்து தடை விதித்துள்ளது. தில்லி காவல் துறையின் ஆலோசனைக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந... மேலும் பார்க்க