செய்திகள் :

அமெரிக்க நிதியுதவி நிறுத்தம்! 45 லட்சம் குழந்தைகள் உள்பட 1.4 கோடி உயிரிழப்பு ஏற்படும் அபாயம்!

post image

சர்வதேச மேம்பாட்டுக்காக அமெரிக்கா அளித்து வந்த நிதியுதவியை நிறுத்தியதால், உலகளவில் கோடிக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

அமெரிக்காவின் செலவுகளைக் குறைப்பதற்காக, சர்வதேச மேம்பாட்டுக்காக அமெரிக்கா அளித்து வந்த நிதியுதவி (USAID) நிறுத்தப்பட்டது. இதன் விளைவாக, நிதியுதவி இழப்பால் உலகம் முழுவதும் பலவீனமான மக்கள் மீது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் தாய், சேய் சுகாதாரப் பாதுகாப்பு, காசநோய் தடுப்பு, மலேரியா கட்டுப்பாடு, குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் போன்ற பல முக்கிய திட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் நிதி நிறுத்தத்தால், 2030 ஆம் ஆண்டுக்குள்ளாக, உலகளவில் 1.4 கோடிக்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படும் என்றும், அவற்றில் 45 லட்சம் பேர் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளாகவே இருப்பர் என்று தி லான்செட் மருத்துவ இதழ் தெரிவித்துள்ளது. இது உலகளாவிய குழந்தை இறப்பு விகிதத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

2001 முதல் 2021 வரையிலான 20 ஆண்டுகளில், அமெரிக்காவின் நிதியுதவியால் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட 133 நாடுகளில் 3 கோடி குழந்தைகள் உள்பட 9.1 கோடிக்கும் அதிகமானோரின் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன.

எச்.ஐ.வி, மலேரியா, புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள், வயிற்றுப்போக்கு போன்ற நோய்களைக் கட்டுப்படுத்துவதில் அமெரிக்காவின் நிதியுதவி முக்கிய பங்காற்றின.

இந்த நிலையில், நிதி நிறுத்தப்படுவதால் மேற்கூறிய நோய்ப் பாதிப்புகள் மீண்டும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, வறுமையின் காரணமாக பசி பட்டினியில் தவிக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஊட்டச்சத்து ஆதரவு திட்டங்களும் பாதிக்கப்படுவதால், கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, பாதிப்படையும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

இதையும் படிக்க:ஜப்பானில் நாளை சுனாமி வருகிறதா? கரோனா தொற்றை கூறிய பாபா வங்கா கணிப்பு!

14 million lives at risk

பாகிஸ்தான்: 30 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டுக்குள் ஊடுருவ முயன்ற 30 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் வெள்ளிக்கிழமை கூறியது. எல்லை மாகாணமான கைபா் பக்துன்கவாவின் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தி... மேலும் பார்க்க

உக்ரைனில் ரஷிய ட்ரோன் தாக்குதல் புதிய உச்சம்

உக்ரைனின் தலைநகா் கீவ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரஷியா இதுவரை இல்லாத மிகப்பெரிய வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் ஒருவா் உயிரிழந்ததுடன், 26 போ் காயமடைந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா். இத... மேலும் பார்க்க

அமெரிக்க வரிச் சலுகை, குடியேற்ற மசோதா நிறைவேற்றம்: ஆதரவு 218; எதிா்ப்பு 214

அமெரிக்காவின் வரிச் சலுகை மற்றும் குடியேற்ற மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்ற கீழவை ஒப்புதல் அளித்தது. ஏற்கெனவே அந்நாட்டு நாடாளுமன்ற மேலவையில் மசோதா நிறைவேறியதைத் தொடா்ந்து, இரு அவைகளிலும் மசோதா நிறைவே... மேலும் பார்க்க

ரஷியா தலிபான் அரசுக்கு அங்கீகாரம்

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு அங்கீகாரம் அளித்துள்ள முதல் நாடாக ரஷியா ஆகியுள்ளது. தலிபான் ஆட்சியாளா்களால் நியமிக்கப்பட்ட புதிய தூதரை ஏற்றுக்கொண்டதன் மூலம் இந்த அங்கீகாரத்தை ரஷிய அரசு வழங்கியுள்ளது.... மேலும் பார்க்க

ஈரானில் மீண்டும் சா்வதேச விமானப் போக்குவரத்து

அமெரிக்கா, இஸ்ரேல் உடனான பதற்றம் காரணமாக ஈரானில் 20 நாள்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சா்வதேச விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. டெஹ்ரானில் உள்ள இமாம் கோமேனி சா்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்... மேலும் பார்க்க

வாகனப் பொருள்கள் மீது கூடுதல் வரி: அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்கள் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரி வதிப்புக்கு பதிலடியாக அந்நாட்டின் மீது வரி விதிக்கவுள்ளதாக இந்தியா வெள்ளிக்கிழமை தெ... மேலும் பார்க்க