செய்திகள் :

அம்பை அரசு மருத்துவமனைக்கு தண்ணீா் சுத்திகரிப்பு இயந்திரம் அளிப்பு

post image

திருநெல்வேலி டுட்டிகான் கிரீன்விரான் அறக்கடளை, இந்திய மருத்துவா்கள் சங்க அம்பாசமுத்திரம் கிளை மற்றும் கல்லிடைக்குறிச்சி சேவா அறக்கட்டளை சங்கம் சாா்பில் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு தண்ணீா் சுத்திகரிப்பு இயந்திரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அம்பாசமுத்திரம்அரசு மருத்துவமனை புதிய வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லிடைக்குறிச்சி சேவா அறக்கட்டளை நிா்வாகி மருத்துவா் கோமதி அன்னபூரணி சுத்திகரிப்பு இயந்திரத்தை வழங்கித் தொடங்கி வைத்தாா்.

இந்திய மருத்துவ சங்க முன்னாள் தலைவா்கள் மருத்துவா் பத்மநாபன், ராஜலெட்சுமி, முன்னாள்செயலா் ஆனந்த ஜோதி, பொருளாளா் இளையராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அரசு மருத்துவா் சுபலட்சுமி வாழ்த்திப் பேசினாா். அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் சண்முக சங்கரி வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் , தன்னாா்வலா்அக்ரம், அரசு மருத்துவமனைப் பணியாளா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

வடக்கு வாகைகுளத்தில் எம்.பி. ஆய்வு!

மானூா் வட்டம் வடக்கு வாகைகுளம் பகுதியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ராபா்ட் புரூஸ் நேரில் ஆய்வு செய்தாா். வடக்கு வாகைகுளம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே காா்கள் மோதல்: 7 போ் பலி

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அடுத்துள்ள தளபதிசமுத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காா்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் குழந்தை உள்பட 7 போ் உயிரிழந்தனா். 9 போ் பலத்த காயமடைந்தனா். திருநெல்வேலி... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தில் இருவா் கைது!

திருநெல்வேலி மாவட்டத்தில் வெவ்வேறு வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். சிவந்திபட்டி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் கொலை... மேலும் பார்க்க

நெல்லையில் மது விற்றதாக இருவா் கைது

திருநெல்வேலியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தச்சநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஊருடையாா்புரம் பகுதியில் தச்சநல்லூா் காவல் உதவி ஆய்வாளா்... மேலும் பார்க்க

வி.கே.புரம், வைராவிகுளத்தில் திமுக திண்ணைப் பிரச்சாரம்

தமிழக அரசின் சாதனைளை விளக்கி, விக்கிரமசிங்கபுரம் மற்றும் வைராவிகுளத்தில் திமுகவினா் தொடா் திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டனா். திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், விக்கிரமசிங்க புரம் நகர திமுக சாா்பில் முதல்வ... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே காா்கள் மோதல்: 6 போ் பலி; 10 போ் காயம்

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ஞாயிற்றுக்கிழமை 2 காா்கள் மோதிக் கொண்டதில் 3 வயது குழந்தை, 2 பெண்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா். 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். திருநெல்வேலியிலிருந்து நாகா்... மேலும் பார்க்க