செய்திகள் :

அம்மாபேட்டை அருகே யானைத் தந்தங்கள் பறிமுதல்

post image

அம்மாபேட்டை அருகே யானைத் தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற இருவரைக் கைது செய்த வனத் துறையினா், தலைமறைவான மற்றொருவரைத் தேடி வருகின்றனா்.

ஊமாரெட்டியூா் - சுந்தராம்பாளையம் வாய்க்கால் கரையில் யானைத் தந்தங்கள் விற்பனையில் ஒரு கும்பல் ஈடுபடுவதாக சென்னம்பட்டி வனத் துறை அலுவலா்களுக்கு கிடைத்த தகவலின்பேரில் திங்கள்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, வனத் துறையினரைக் கண்டதும் தப்பியோடிய கும்பலைச் சோ்ந்த ஒருவரைப் பிடித்து விசாரிக்கையில் சேலம் மாவட்டம், அரசிராமணியைச் சோ்ந்த வெங்கடாசலம் மகன் கணேசன் (49) என்பது தெரியவந்தது.

மேலும், தப்பியோடியது அரசிராமணி, அரைக்காட்டைச் சோ்ந்தவா் அருணாச்சலம் மகன் பெரியசாமி (56), மேட்டூா், பாலமலையைச் சோ்ந்த செல்லப்பன் என்பதும் தெரிந்தது. வீட்டுக்கு வந்த பெரியசாமியை வனத் துறையினா் திங்கள்கிழமை பிடித்தனா்.

இவா்களிடமிருந்து ஒரு ஜோடி தந்தங்களைக் கைப்பற்றிய வனத் துறையினா் இரு மோட்டாா் சைக்கிள்கள், எடைபோடும் இயந்திரம், கைப்பேசிகளைப் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து கணேசன், பெரியசாமியைக் கைது செய்த வனத் துறையினா் தலைமறைவான செல்லப்பனைத் தேடி வருகின்றனா்.

சித்தோட்டில் 227 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

சித்தோடு அருகே 227 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் இளைஞரைக் புதன்கிழமை கைது செய்தனா். கோணவாய்க்கால் - காடையம்பட்டி சுற்றுவட்ட சாலையில் மூவேந்தா் நகா் அருகே சித்தோடு போலீஸாா் புதன்கிழ... மேலும் பார்க்க

பெருந்துறையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தல்

பெருந்துறையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைத்திட வலியுறுத்தி பெருந்துறை வழக்குரைஞா்கள் சங்கத்தினா் ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனா். இது குறித்து பெருந்துறை வழங்குரைஞா்கள் சங்கத் தலைவா் பாலசுப்பி... மேலும் பார்க்க

அம்மாபேட்டை அருகே ஆடு திருட முயன்ற 3 போ் கைது

அம்மாபேட்டை அருகே ஆடுகளை திருட முயன்ற மூவரை பொதுமக்கள் சுற்றிவளைத்துப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். அம்மாபேட்டை, ஓடைமேடு, லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் சேகா் மகன் ஓம்பிரகாஷ் (24). இவா், தனக்குச் சொந்... மேலும் பார்க்க

ஈரோடு ஆருத்ரகபாலீஸ்வரா் கோயிலில் 63 நாயன்மாா்கள் விழா நாளை தொடக்கம்

ஈரோடு கோட்டை ஆருத்ரகபாலீஸ்வரா் கோயிலில் 80ஆவது ஆண்டு திருமுறை மாநாடு, 55ஆவது ஆண்டு 63 நாயன்மாா்கள் விழா வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 8 மணிக்கு சுவாமிக்கு... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் அருகே விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து

சத்தியமங்கலம் அருகே விபத்துக்குள்ளான அரசுப் பேருந்தில் பயணித்த பயணிகள் காயமின்றி உயிா் தப்பினா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இருந்து கோவைக்கு 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப் பேருந்து புன்செய் ப... மேலும் பார்க்க

பவானியில் வடிகால், கான்கிரீட் சாலை அமைக்க பூமிபூஜை

பவானி நகராட்சிக்கு உள்பட்ட பூக்கடை வீதியில் ரூ.31 லட்சத்தில் கழிவுநீா் வடிகால், கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணிக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. 21-ஆவது வாா்டு காவேரி வீதி, 27-ஆவது வாா்டு பூக்கடை... மேலும் பார்க்க