செய்திகள் :

அயோத்தியில் சுவாமி தரிசனம் செய்தார் பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே!

post image

பூட்டான் பிரதமர் தாஷோ ஷெரிங் டோப்கே அயோத்தி ராமர் கோயில் மற்றும் பிற முக்கிய கோயில்களில் வழிபாடு மேற்கொண்டார்.

இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் 9.30 மணியளவில் அயோத்தி விமான நிலையத்தில் பிரதமர் டோப்கே வந்தடைந்தார். அயோத்தி மாவட்ட நிர்வாகத்தால் பிரதமர் டோப்கேவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் உத்தரப் பிரதேசஅமைச்சர் சூர்ய பிரதாப் ஷாஹி, அயோத்தி மேயர் கிரிஷ் பதி திரிபாதி, எம்எல்ஏ வேத் பிரகாஷ் குப்தா, மூத்த நிர்வாக மற்றும் காவல்துறை அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.

விமான நிலையத்திலிருந்து, அவர் அலாகாபாத் -லக்னௌ-கோரக்பூர் நெடுஞ்சாலைகள் வழியாக அயோத்தி ராமர் கோயிலை அடைந்தார்.

அயோத்தி நகரம் முழுவதும் பிஏசி, சிஆர்பிஎஃப், எஸ்எஸ்எஃப், சிவில் போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பிரதமர் அலுவலகம் மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் அலுவலகம் அவரது வருகையை உன்னிப்பாகக் கண்காணித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரதமர் டோப்கே ராம் லல்லா கோயில், அனுமன்கரி மற்றும் அயோத்தியில் உள்ள பிற முக்கிய கோயில்களை தரிசனம் செய்தார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் சிறப்பு மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பூட்டான் பிரதமர் அயோத்தியில் இருந்து தில்லிக்குச் செல்கிறார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, டோப்கேயை வரவேற்க விமான நிலையத்தில் காத்திருந்த அமைச்சர் சூர்ய பிரதாப் ஷாஹி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

பூட்டான் பிரதமருக்கு பிரமாண்டமான வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவும் பூட்டானும் நீண்ட காலமாக மிகவும் நல்லுறவைப் பகிர்ந்து கொள்கின்றன.

இரு நாடுகளின் தலைவர்களும் அடிக்கடி ஒருவரையொருவர் சந்தித்து வருகிறார்கள், இதை ஒரு முக்கியமான வருகையாக நாங்கள் கருதுகிறோம் என்று அவர் கூறினார்.

Bhutan Prime Minister Dasho Tshering Tobgay arrived in Ayodhya on Friday morning on a four-hour visit, during which he offered prayers at the Ram temple and other prominent shrines.

உடல் நலனைப் பேணுவதில் முன்னோடி பிரதமர்: மிலிந்த் சோமன்

உடல் நலனைப் பேணுவதில் தனக்கு முன்னோடியாக பிரதமர் நரேந்திர மோடி இருப்பதாக நடிகர் மிலிந்த் சோமன் தெரிவித்துள்ளார். தில்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் மிலிந்த் சோமன் கலந்துகொண்ட... மேலும் பார்க்க

பள்ளி, மருத்துவமனைகளை விட மசூதிகள் அதிகம்! எங்கு தெரியுமா?

பாகிஸ்தான் நாட்டில் பள்ளி மற்றும் மருத்துவமனைகளின் எண்ணிக்கையை விட மசூதிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக பொருளாதாரக் கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. அதாவது, பள்ளிகளின் எண்ணிக்கையை விட... மேலும் பார்க்க

நள்ளிரவில் முழுமையாகத் தெரியும் சந்திர கிரகணம்! அடுத்து 2028-இல்தான்!

இந்தியாவில் 2022-ஆம் ஆண்டுக்குப் பின் வானில் முழுமையாகத் தெரியும் முழு சந்திர கிரகணம் இன்று(செப். 7) நள்ளிரவில் நிகழ்கிறது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 11.01 மணிக்கு முழு சந்திர கிரகணமாக மாறி, திங்கள்கிழ... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: நாளை மாதிரி வாக்குப்பதிவு - என்ன நடக்கும்?

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்.9-இல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு ஒருநாள் முன்னதாக திங்கள்கிழமை(செப். 8) மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்கின்றனர். மாதிரி... மேலும் பார்க்க

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நலமாக உள்ளார்: மருத்துவமனை அறிக்கை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நலமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. பஞ்சாப் முதல்வர் சோர்வு மற்றும் குறைந்த இதயத் துடிப்பு காரணமாக மொஹாலியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

கேரளத்தில் மனைவியின் கள்ளக் காதலனால் கணவன் கொலை !

கேரளத்தில் மனைவியின் கள்ளக் காதலனால் கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், புதூரில் ஷியாம் சுந்தரின் மனைவியும், அவரது குழந்தையும் கடந்த நான்கு ஆண்டுகளாக தனேஷுடன் வசி... மேலும் பார்க்க