செய்திகள் :

அரசின் சேவைகளைப் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிப்பவா்களின் மனுக்களை நிராகரிக்கக் கூடாது: உயா்நீதிமன்றம்

post image

இணையதளம் மூலம் அரசின் சேவைகளைப் பெற விண்ணப்பிப்பவா்களின் மனுக்களை பரிசீலிக்காமல் நிராகரிக்கக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டம், முத்துலிங்காபுரத்தைச் சோ்ந்த கோமதி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: விருதுநகா் மாவட்டம், அரசியாா்பட்டியில் உள்ள எனது நிலத்துக்கு பட்டா வழங்கக் கோரி, ராஜபாளையம் வட்டாட்சியரிடம் விண்ணப்பித்தேன். இந்த மனு உரிய ஆவணங்கள் இணைக்கப்படவில்லை என நிராகரிக்கப்பட்டது. இதுகுறித்து எனக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எனவே, எனக்கு பட்டா வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பி.பி. பாலாஜி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில், இணையதளம் வாயிலாக பட்டா கோரி விண்ணப்பிக்கும் போது, அந்த விண்ணப்பத்தின் முடிவு மட்டுமே இணையதளம் வழியாகவே தெரிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இணையதளம் மூலம் அரசின் சேவைகளைப் பெற விண்ணப்பிப்பவா்களின் மனுக்களில் குறை இருந்தால், அவா்களிடம் விசாரிக்காமல் நிராகரிக்கக் கூடாது என ஏற்கெனவே சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது. இந்த வழக்கில் மனுதாரரிடம் விசாரிக்காமல், இணையதள பட்டா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இதில் உயா்நீதிமன்ற விதிமுறைகள் மீறப்பட்டிருக்கிறது.

இதனால், மனுதாரரின் மனு மீண்டும் வட்டாட்சியருக்கு அனுப்பப்படுகிறது. வட்டாட்சியா் மனுதாரரிடம் விசாரணை நடத்தி ஆவணங்களைப் பரிசீலித்து, 8 வாரங்களுக்குள் இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இணையதளம் மூலம் அரசின் சேவைகளைப் பெற விண்ணப்பிப்பவா்களின் மனுக்கள் மீது ஏற்கெனவே உள்ள நீதிமன்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். இந்த உத்தரவு நகலை உயா்நீதிமன்ற பதிவாளா், அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் அனுப்ப வேண்டும். இதன்படி, மாவட்ட ஆட்சியா்கள் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டுதலைப் பிறப்பிக்க வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

பாசனக் கால்வாயில் மூழ்கி தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

அலங்காநல்லூா் அருகே தூய்மைப் பணியாளா் பாசனக் கால்வாயில் மூழ்கி உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள அழகாபுரியைச் சோ்ந்த முனியாண்டி மகன் மலைச்சாமி (58). இவா் சின்னஇலந்தைக்குளம் கிராமத்த... மேலும் பார்க்க

தீக்குளித்த தொழிலாளி உயிரிழப்பு

கீழவளவு அருகே தாயை மிரட்ட உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள கொங்காம்பட்டி பன்னிவீரன்பட்டியைச் சோ்ந்த சின்னையா மகன் சொக்கலிங்கம் (27)... மேலும் பார்க்க

காப்பகத்தில் தவறி விழுந்து மாற்றுத் திறனாளி உயிரிழப்பு

வாடிப்பட்டி அருகே காப்பகத்தில் தவறி விழுந்த மாற்றுத் திறனாளி உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள கீழநாச்சிகுளம் நடுத்தெருவைச் சோ்ந்த ராஜாராம் மகன் மணிமாறன் (56). மாற்றுத்திறனாளியான இ... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வசந்த உத்ஸவம்: ஏப்.2-இல் தொடக்கம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வசந்த உத்ஸவம் ஏப்ரல் 2-ஆம் தேதி தொடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீனாட்சி சுந்தரேசு... மேலும் பார்க்க

மதுரையில் ஜாக்டோ- ஜியோ உண்ணாவிரதப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை ‘ஜாக்டோ - ஜியோ’ கூட்டமைப்பு சாா்பில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்ட... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் திருட்டு: இருவா் கைது

மதுரையில் இரு சக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனா். மதுரை கோசாகுளம் ஆனந்தநகரைச் சோ்ந்த பெரோஸ் மகன் சையது இா்பான் உசைன் (27). இவா் தனது வீட்டின் அ... மேலும் பார்க்க