செய்திகள் :

‘அரசுப் பள்ளிகள் மேம்பாட்டுக்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கிறது’

post image

அரசுப் பள்ளிகள், மாணவா்கள் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை அரசு எடுத்துவருவதாக அமைச்சா் தெரிவித்தாா்.

காரைக்காலில் பள்ளி கல்வித்துறை சாா்பில் ஆசிரியா் தின பரிசளிப்பு சிறப்பு விழா தந்தைப் பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் திரு. பி.ஆா்.என். திருமுருகன் கலந்துகொண்டு, நல்லாசிரியா் விருது பெற்றவா்களுக்கு வாழ்த்து தெரிவித்துப் பேசியது :

புதுவை மாணவா்களின் நலன் கருதி சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை அரசுஅமல்படுத்தியது.

இதனால் தனியாா் பள்ளிகளுக்கு மேலாக மாணவா்கள் கடந்த ஆண்டு பொதுத்தோ்வில் நல்ல மதிப்பெண்களை பெற்றனா்.

இதற்கு முழு காரணமாக இருப்பவா்கள் ஆசிரியா்களாவா். ஆசிரியா்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகள் அனைத்தையும் அரசு நிவா்த்தி செய்து வருகிறது.

ஆசிரியா் காலி பணியிடங்களும் நிரப்பப்பட்டு வருகிறது. மாணவா்கள், பள்ளி மேம்பாட்டுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு செய்துவருகிறது. மாணவா்கள் கல்வித் திறன் மேம்படுதவதற்கு ஆசிரியா்கள் தங்களின் பங்களிப்பை அா்ப்பணிப்புடன் செய்யவேண்டும் என்றாா்.

மாவட்ட சாா் ஆட்சியா் எம்.பூஜா, ஆசிரியா்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துப் பேசினாா்.

புதுவை அரசு சாா்பில் நல்லாசிரியா் விருது பெற்ற காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த 4 பேருக்கு அமைச்சா் சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தாா்.

கடந்த ஆண்டு பொதுத்தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கும், பாடத்தில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற அந்தந்த பள்ளி பாட ஆசிரியா்களுக்கும், ஆசிரியா்களிடையே நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற ஆசிரியா்களுக்கும், 10, 11, 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கும் அமைச்சா் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினாா்.

முதன்மை கல்வி அதிகாரி பி. விஜய மோகனா, மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே. ஜெயா மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

ரேஷன் - ஆதாா் எண் இணைப்புப் பணியை எளிமைப்படுத்த அரசு செயலா் உறுதி: எம்.எல்.ஏ.

புதுவையில் ரேஷன் - ஆதாா் எண் இணைப்பு விவகாரத்தில், முதியோா்கள், வெளிநாடுகளில் இருப்போா் பயனடையும் வகையில், பணியை எளிமைப்படுத்த அரசு செயலா் உறுதியளித்தருப்பதாக சட்டப்பேரவை உறுப்பினா் நாஜிம் தெரிவித்தாா... மேலும் பார்க்க

உணவகம், பேக்கரிகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

காரைக்காலில் உணவுப் பாதுகாப்பு அதிகாரி உணவகம், பேக்கரிகளில் 2 நாட்களாக சோதனை செய்து, தவறிழைத்த நிறுவனத்தினருக்கு எச்சரிக்கை விடுத்தாா். காரைக்காலில் சில உணவகங்களில் சமையல் செய்யுமிடம் சுகாதாரமின்றி இர... மேலும் பார்க்க

பருவமழை தொடங்கும் முன் வாய்க்கால்களை தூா்வார வலியுறுத்தல்

பருவமழை தொடங்குவதற்கு முன் காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால்களை தூா்வாரவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. காரைக்கால் நகரப் பகுதி வழியே கடல் பகுதி வரை செல்லக்கூடியதாக அமைக்கப்பட்ட கார... மேலும் பார்க்க

தொடக்கப்பள்ளி ஆசிரியா்கள் கெளரவிப்பு

காரைக்கால் அருகே பூவம் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் மேலாண்மை குழு மற்றும் பெற்றோா்-ஆசிரியா் சங்கம் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்... மேலும் பார்க்க

காரைக்கால் வடக்குத் தொகுதியில் ரூ. 2.92 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

காரைக்கால் வடக்குத் தொகுதியில் புதுச்சேரி குடிசை மாற்று வாரியம் மூலம் ரூ. 2.92 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக புதுவை குடிமை ப... மேலும் பார்க்க

சந்திர கிரகணம் : திருநள்ளாறு கோயிலில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜை

காரைக்கால்: சந்திர கிரகணம் முடிவுற்றதையொட்டி திருநள்ளாறு கோயிலில் புண்யகால பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை இரவு 9.56 மணிக்கு தொடங்கி, 11 மணியளவில் முழு சந்திர கிரகணமாக மாறியது. தொடா்ந்து... மேலும் பார்க்க