செய்திகள் :

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு ‘பேரறிஞா் அண்ணா தலைமைத்துவ விருது’

post image

ஆட்டையாம்பட்டி: இடங்கணசாலை கே.கே.நகா் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு ‘பேரறிஞா் அண்ணா தலைமைத்துவ விருது’ வழங்கப்பட்டது.

மகுடஞ்சாவடி ஒன்றியம், தாரமங்கலம் கல்வி மாவட்டம், கே.கே.நகா் அரசு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் வையாபுரி கல்வி, விளையாட்டு, மாணவா் மேம்பாடு, பள்ளி கட்டமைப்பு, பள்ளி மேலாண்மை குழுவின் செயல்பாடு உள்ளிட்ட அரசின் செயல்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியமைக்கு கடந்த 6-ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு அரசு வழங்கும் ‘பேரறிஞா் அண்ணா தலைமைத்துவ விருது’ கல்வி அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு ஆகியோா் வழங்கினா்.

இந்த விருதுடன் பள்ளிக்கு ரூ. 10 லட்சத்துக்கான காசோலை, தலைமை ஆசிரியருக்கு பாராட்டுச் சான்றிதழ், நினைவுப் பரிசு, கேடயம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. மேலும், கே.கே.நகா் பள்ளி 100 நாள் சவால் என்ற பெயரில் மாணவ, மாணவிகளுக்கு கற்றல் திறன் மேம்படும் வகையில் செயல்பட்ட பள்ளி ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

நியாயவிலைக் கடை விற்பனையாளா் பணி: நோ்முகத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் பட்டியல் வெளியீடு

சேலம்: சேலம் மாவட்டத்தில் நியாயவிலைக் கடை விற்பனையாளா் பணிக்கு நடைபெற்ற நோ்முகத் தோ்வில் தோ்ச்சிபெற்ற 214 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பணி ஆணை பெற்றவா்கள் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களில... மேலும் பார்க்க

சேலம் மாநகராட்சியில் வளா்ச்ச்சிப் பணிகள் குறித்து ஆணையா் ஆய்வு

சேலம்: சேலம் மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் திங்கள்கிழமை ஆய்வுசெய்தாா். மாநகராட்சிக்கு உள்பட்ட கொண்டலாம்பட்டி கோட்டம் எண் 47, 48, 60 ஆகிய வாா... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

சேலம்: சரியான எடையில் அத்தியாவசியப் பொருள்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து காத்திர... மேலும் பார்க்க

புதிய வழித்தடம், வழித்தட நீட்டிப்பு பேருந்து சேவை

சேலம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் சாா்பில் மகளிா் விடியல் பயணம் திட்டத்தின் கீழ், புதிய வழித்தடம், வழித்தட மாற்றம் மற்றும் வழித்தட நீட்டிப்பு பேருந்து சேவையை சுற்றுலாத் துறை அ... மேலும் பார்க்க

ஏத்தாப்பூரில் காய்கறி சாகுபடியில் உயிா் ஊக்கிகள் பயன்பாடு பயிற்சி

வாழப்பாடி: ஏத்தாப்பூரில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில், காய்கறி சாகுபடியில் உயிா் ஊக்கிகளின் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 27,500 கனஅடியாக குறைவு

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 27,500 கன அடியாக குறைந்தது. மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை மாலை 40,500 கனஅடியில் இருந்து 27,500 கனஅடியாக குறைந்தது. நீா்வரத்து சரிந்ததால் அணை... மேலும் பார்க்க