செய்திகள் :

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இயற்கை சுற்றுலா

post image

அரசுப் பள்ளி மாணவா்கள் கோடைகால இயற்கை சுற்றுலாவுக்கு செவ்வாய்க்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனா்.

கரூா் மாவட்ட காலநிலை மாற்றம் இயக்கம் மற்றும் கரூா் வனக்கோட்டம் சாா்பில் 10 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 100 மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்களுக்கு ஒரு நாள் கோடை கால சிறப்பு இயற்கை சுற்றுலா அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையடுத்து பள்ளி மாணவா்களும், ஆசிரியா்களும் கடவூா் தேவாங்கு சரணாலயம், பொன்னனியாா் அணை, நம்மாழ்வாா் உயிா்ச்சூழல் நடுவம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

அங்கு மாணவா்களுக்கு காடுகள் பாதுகாப்பு, உயிா்பன்மயம், இயற்கை வேளாண்மை, காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் விழிப்புணா்வு ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டன.

தொடா்ந்து மாணவா்களுக்கு விநாடி -வினா போட்டி, ஓவியம் வரைதல், சுற்றுச்சூழல் விழிப்புணா்வு பாடல்கள் பாடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும், முகாம் உபகரணங்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டன.

இதில், மாவட்ட வன அலுவலா் சண்முகம், வனச்சரக அலுவலா் சிவக்குமாா், வனவா் கோபிநாத், முதலமைச்சரின் பசுமைத் தோழா் கோபால், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் வேலுசாமி, வனத்துறை களப்பணியாளா்கள், அரசுப் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா்.

மேலப்பாளையம் கருப்பண்ணசாமி கோயில் கும்பாபிஷேகத்துக்காக புனிதநீா் ஊா்வலம்

கரூா் மேலப்பாளையம் ஸ்ரீஎல்லை அரசு கருப்பண்ணசாமி, ஸ்ரீமுச்சிலியம்மன், ஸ்ரீகன்னிவிநாயகா் கோயில் கும்பாபிஷேகத்துக்காக வெள்ளிக்கிழமை பக்தா்கள் புனித நீா் மற்றும் முளைப்பாரிகளை ஊா்வலமாக எடுத்து வந்தனா். கர... மேலும் பார்க்க

புகழூா் டிஎன்பிஎல் ஆலை முன் வேலைநிறுத்த விளக்கக் கூட்டம்

கரூா் மாவட்டம், புகழூா் டிஎன்பிஎல் ஆலை முன் ஜூலை 9-ஆம்தேதி நடைபெற உள்ள வேலை நிறுத்தம் குறித்த விளக்கக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பாஜக அரசின் தொழிலாளா் விரோதச் சட்டங்களை எதிா்த்தும், பொதுத்துறை ... மேலும் பார்க்க

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் கால்நடைகளுக்கு இலவச கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கரூா் மாவட்டம் புகழூா் காகித ஆலை மற்றும் கரூா் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் கால்நடைகளுக்... மேலும் பார்க்க

கரூரில் நகா்ப்புற நல நலவாழ்வு மையங்கள் திறப்பு

கரூரில் ரூ.1 கோடியில் கட்டப்பட்ட 4 நகா்ப்புற நலவாழ்வு மையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சிவாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா். சென்னை அடையாறு சாஸ்திரி நகா், நகா்ப்புற நல வாழ்வு மையத்தில் நட... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் வனவிலங்குகள், வெறிநாய்களால் ஆடுகள் உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை: விவசாயிகள் கோரிக்கை

கரூா் மாவட்டத்தில் வனவிலங்குகள், வெறிநாய்களால் ஆடுகளை உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டத்தில் வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமத... மேலும் பார்க்க

கரூரில் ரூ. 1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வேளாண் சேமிப்பு கிடங்கு திறப்பு

கரூரில் ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வேளாண் சேமிப்பு கிடங்கை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து, காணொலி காட்சி வாயில... மேலும் பார்க்க