செய்திகள் :

அரசு ஊழியர் தற்கொலை! மரண வாக்குமூலம் இருந்தும் அலட்சியம்! தமிழக காவல் மீது பாஜக குற்றச்சாட்டு!

post image

வேலூரில் அரசு ஊழியராகப் பணிபுரிந்து வந்த பெண் தற்கொலை சம்பவத்தில் தமிழக காவல்துறை மெத்தனம் காட்டுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பக்கத்தில், வேலூர் மாவட்டம் நெல்லூர்பேட்டையில் செயல்பட்டுவரும் வள்ளலார் மேல்நிலைப்பள்ளியில், கடந்த 30 ஆண்டுகளாக சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்த பாரிஜாதம், திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையினால் தனது மேல் அதிகாரிகள் கொடுத்த மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டது மிகுந்த மன வேதனையளிக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்ததுமுதல் அரசு அதிகாரிகளின் அராஜகம் கட்டுக்கடங்காமல் பெருகி வருவதற்கு இதுவும் ஒரு சான்று. தனது தற்கொலைக்கு காரணமான அதிகாரிகளின் பெயர்களைத் தெளிவாகக் கடிதத்தில் பாரிஜாதம் குறிப்பிட்டுள்ள போதும், திமுக அரசு இதுவரை அந்த அதிகாரிகளைக் கைது செய்யாமல் இழுத்தடிப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

திமுக ஆட்சியின் அவல நிலை குறித்த உண்மைகளை வெளிக்கொணரும் சமூக ஆர்வலர்களைத் தேடித்தேடி கைது செய்து, பொய் வழக்கு போடும் தமிழக அரசின் ஏவல்துறை, அத்தனை ஆதாரங்களும் மரண வாக்குமூலமும் தங்கள் கண்முன்னே இருக்கும் இந்த வழக்கில் மெத்தனம் காட்டுவது ஏன்?

தனது கட்சிக்காரர்களும், அரசு அதிகாரிகளும் செய்யும் தவறுகளை மூடி மறைப்பது திமுக அரசுக்கு கைவந்த கலை என்பதும், அதுவும் பாதிக்கப்பட்டவர்கள் ஏழை, எளிய மக்களாக இருந்தால் கண்ணும் காதும் வைத்தாற்போல கட்டப்பஞ்சாயத்து செய்து வழக்கை மூடி விடுவார்கள் என்பதும் ஊரறிந்த விஷயம்.

ஆனால் 30 ஆண்டுகளாக அரசுக்காக உழைத்த பாரிஜாதம் மரணத்தை அப்படி இலகுவாகக் கடந்துவிட முடியாது. எனவே, நேரடியாகவோ மறைமுகமாகவோ பாரிஜாதத்தை தற்கொலைக்கு தூண்டிய அனைவருக்கும் கடுமையான தண்டனைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கள்ளச்சாரயம் குடித்து இறந்தால் ரூ. 10 லட்சம் கொடுக்கும் திமுக அரசு, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தாருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டுமென தமிழக முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

Nainar Nagenthiran urges arrest of officials in connection with the suicide of a Nutritionist Organizer

தமிழகத்தில் மீண்டும் குண்டு வைக்க திட்டமிட்ட அபுபக்கா் சித்திக்!

தமிழகத்தில் பயங்கரவாதி அபுபக்கா் சித்திக் மீண்டும் குண்டு வைக்கத் திட்டமிட்டிருந்தது போலீஸாா் விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவை தொடா் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய பயங்க... மேலும் பார்க்க

ஆந்திர இளைஞரை கொலை செய்து கூவத்தில் வீசிய வழக்கு: பவன் கல்யாண் கட்சி பெண் நிா்வாகி உள்பட 5 போ் கைது

சென்னையில் ஆந்திர இளைஞரைக் கொலை செய்து கூவத்தில் வீசிய வழக்கில், நடிகா் பவன் கல்யாண் கட்சியைச் சோ்ந்த பெண் நிா்வாகி உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை ஏழுகிணறு எம்எஸ் நகா் வீட்டு வசதி வாரிய குட... மேலும் பார்க்க

கொகைன் வழக்கில் கைது நடவடிக்கை தொடரும்: காவல் ஆணையா் உறுதி

கொகைன் வழக்கில் கைது நடவடிக்கை தொடரும் என சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை அளித்த பேட்டி: நுங்கம்பாக்கம் மதுபானக் கூடத்தில் நிகழ்ந்த மோதல் தொடா்பாக கட... மேலும் பார்க்க

திமுக கூட்டணியிலிருந்து மாா்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் வெளியேறும்: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

திமுக கூட்டணியில் இருந்து மாா்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் விரைவில் வெளியேறும் என்று மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா். மத்திய அரசுத் துறைகளின் பணிகளுக்கான நியமன ஆணை வழங்கு... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான நிலத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டடத்தை உரிய சட்ட விதிகளைப் பின்பற்றாமல் இடித்ததால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீ... மேலும் பார்க்க

ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி விவகாரம்: விசாரணை நடத்த அன்புமணி தரப்பு கோரிக்கை

பாமக நிறுவனா் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி இருந்த விவகாரம் தொடா்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கட்சித் தலைவா் அன்புமணி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பாமக செய்தித் தொடா்பா... மேலும் பார்க்க