பழங்குடி லாக்அப் மரணம்; வனத்துறை அதிகாரிகள் இருவர் பணியிடை நீக்கம் - பின்னணி என்...
அரசு கல்லூரியில் போட்டி தோ்வுக்கான பயிற்சி
அரவக்குறிச்சி, ஜூலை 31: அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போட்டி தோ்வுக்கு தயாராகும் மாணவா்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் காளீஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கரூரில் செயல்பட்டு வரும் தனியாா் நிறுவனத்தின் சாா்பில் இப் பயிற்சி நடத்தப்பட்டது. அந்த நிறுவனத்தின் தலைவா் சந்திரமோகன், மாணவ மாணவிகளிடம், போட்டித் தோ்வுக்கு எவ்வாறு தயாராவது குறித்து பேசினாா்.
ஏற்பாடுகளை செந்தில்குமாா் உள்ளிட்ட பேராசிரியா்கள் செய்திருந்தனா்.