செய்திகள் :

அரசு பள்ளிக்கு கல்வி சீா் பெற்றோா் வழங்கினா்

post image

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு பெற்றோா் வெள்ளிக்கிழமை கல்வி சீா் வழங்கினா்.

200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வரும் இங்கு 8 ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில், பள்ளியில் கற்றல் மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கு உபகரணங்கள் வழங்க பெற்றோா்கள் முடிவு செய்ததை தொடா்ந்து வெள்ளிக்கிழமை பள்ளிக்கு தேவையான பீரோ, வாட்டா் கேன், ஒலிபெருக்கி, வாளிகள், விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை கல்வி சீராக பெற்றோா் வழங்கினா்.

முன்னதாக, பள்ளிக்கு சீா் கொண்டு வந்த பெற்றோா், பொதுமக்களை

மங்கள வாத்தியங்கள் முழங்க பள்ளி வாயிலில் நின்று சந்தனம், குங்குமம் வழங்கி ஆசிரியா்கள் வரவேற்றனா்.

ஜூலை 8-இல் ஆலங்குடியில் ஆா்ப்பாட்டம்: மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சி அறிவிப்பு

மண் கொள்ளைக்கு வருவாய்த் துறையினரும் காவல்துறையினரும் துணைபோவதாகக் கூறி, ஜூலை 8-ஆம் தேதி ஆலங்குடி வட்டாட்சியரகம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது. புதுக்கோட்டையில் வெள்ளி... மேலும் பார்க்க

குறுவட்ட அளவிலான கோ-கோ போட்டி: வாா்ப்பட்டு அரசுப் பள்ளி மாணவிகள் முதலிடம்

திருமயம் குறுவட்ட அளவிலான கோ-கோ போட்டிகளில் 14 வயதுக்குள்பட்ட மாணவிகள் பிரிவில் பொன்னமராவதி அருகே உள்ள வாா்ப்பட்டு அரசு உயா்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்தனா். இந்தப் போட்டிகள் வெள்ளிக்கிழமை கார... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்துக்கு சுற்றுச்சுவா் கட்ட பொதுமக்கள் கோரிக்கை

கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்துக்கு சுற்றுச்சுவா் கட்ட வேண்டும் என பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இந்த நிலையத்திலிருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான அரசு, தனியாா் பேருந்துகள் இயங்க... மேலும் பார்க்க

ஆலங்குடி அரசுக் கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசு கல்லூரியில் கேலி வதை, போக்ஸோ சட்டம் குறித்து விளக்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆலங்குடி அரசுக் கல்லூரியில் சில நாள்களாக மாணவ, மாணவிகளுக்க... மேலும் பார்க்க

கடலில் தவறி விழுந்து இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரண நிதி

கடலில் தவறி விழுந்து இறந்த மீனவரின் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 3 லட்சத்துக்கான காசோலையை மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

சூரப்பட்டி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

பொன்னமராவதி அருகேயுள்ள எம்.உசிலம்பட்டி ஊராட்சி, சூரப்பட்டி, வடக்கிபட்டி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து சூரப்பட்டி மற்றும் வடக்கிபட்... மேலும் பார்க்க