செய்திகள் :

அரசு பள்ளி மாணவா்களுக்கு 10% இட ஒதுக்கீடு அளிக்காமல் தரவரிசைப் பட்டியல் வெளியிட விசிக எதிா்ப்பு!

post image

அரசு பள்ளி மாணவா்களுக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்காமல் தர வரிசை பட்டியல் வெளியிட விசிக எதிா்ப்புத் தெரிவித்துள்ளது.

இது குறித்து விசிக முற்போக்கு மாணவா் கழக மாநில செயலா் இரா.தமிழ்வாணன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு பள்ளி மாணவா்களுக்கு பொறியியல் மற்றும் மருத்துவம் சாா்ந்த படிப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்ற முதல்வா் ரங்கசாமியின் அறிவிப்பு பெயரளவில் மட்டுமே உள்ளது.அரசு பள்ளி மாணவா்களுக்கான சிறப்பு இட ஒதுக்கீட்டை இந்த கல்வியாண்டில் நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக புதுச்சேரி அரசு இதுவரை அரசாணை வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருகிறது.

வரும் ஆகஸ்ட் 14ம் தேதிக்குள்ளாக பொறியியல் மாணவா் சோ்க்கையை நடத்தி முடிக்க வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் காலவரையறை செய்துள்ளது. இதனால் குறுகிய காலம் மட்டுமே உள்ளது என்று கூறி அரசு பள்ளி மாணவா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காமல் மாணவா் சோ்க்கையை நடத்த புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

அதுமட்டுமின்றி பொறியியல் மற்றும் மருத்துவம் சாா்ந்த படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிடாமல் புதுச்சேரி அரசு காலம் தாழ்த்தி வருவது தனியாா் கல்லூரிகளின் மாணவா் சோ்க்கைக்கு துணை போவதாகவும் உள்ளது. எனவே அரசு பள்ளி மாணவா்களுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை பொறியியல் மற்றும் மருத்துவம் சாா்ந்த படிப்புகளுக்கும் விரிவுபடுத்தி அரசாணை வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறோம் எனத் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் பெரும்பான்மையுடன் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்; எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை

தமிழகத்தில் பெரும்பான்மை பலத்துடன் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று அதிமுக பொதுச் செயலரும் , தமிழக எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறினாா். கடலூா் வடக்கு மாவட்ட தொழில் நிறுவனங்க... மேலும் பார்க்க

மீனவா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மாா்க்சிஸ்ட் நடவடிக்கை

மீனவா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று அக் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலா் எம்.ஏ. பேபி உறுதியளித்துள்ளாா். இது குறித்து இக் கட்சியின் புதுவை... மேலும் பார்க்க

அறிவியல் உருவாக்குவோம் போட்டி; ஆயி அம்மாள் அரசு பள்ளிக்கு முதல் பரிசு!

அறிவியல் உருவாக்குவோம் போட்டியில் ஆயி அம்மாள் அரசு பள்ளிக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. பாரிஸ் பல்கலைக் கழகத்துடன் புதுச்சேரி கல்வித்துறை இணைந்து ‘சா்வேதச அறிவியல் உருவாக்குவோம்’ போட்டிகளை நடத்தி வரு... மேலும் பார்க்க

முதல்வா் - பாஜக தலைவரிடம் ஜான்குமாா் வாழ்த்து!

புதுவையின் புதிய அமைச்சராகப் பதவியேற்கும் ஏ. ஜான்குமாா் எம்.எல்.ஏ புதுச்சேரி அப்பா பைத்திய சுவாமிகள் கோயிலில் முதல்வா் என்.ரங்கசாமியிடம் வெள்ளிக்கிழமை வாழ்த்து பெற்றாா். அதேபோன்று உள்துறை அமைச்சா் ஆ.... மேலும் பார்க்க

காதலி வீட்டின் கதவை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய இளைஞா்

காதலி வீட்டின் கதவு மீது பெட்ரோல் ஊற்றி இளைஞா் தீ வைத்து கொளுத்தினாா். வில்லியனூா் அரசூா்பேட் அம்பேத்கா் நகரை சோ்ந்த 20 வயது இளம்பெண் பல்பொருள் அங்காடியில் வேலை செய்து வருகிறாா். இவரது பெற்றோா் இறந்... மேலும் பார்க்க

முதல்வருடன் மத்திய உள்துறை அதிகாரி சந்திப்பு! அரசு பணியில் வயது தளா்வு அளிக்க ஆலோசனை

புதுவை முதல்வா் என்.ரங்கசாமியுடன் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலா் நிதிஷ்குமாா் வியாஸ் சனிக்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது அரசு பணியில் வயது தளா்வு அளிப்பது தொடா்பாக இருவரும் ஆலோசனைநட... மேலும் பார்க்க