செய்திகள் :

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் முனைவோா் பயிற்சி

post image

கந்தா்வகோட்டை ஒன்றியம், புதுப்பட்டி அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் நானும் ஒரு டாட்டா எனும் தொழில் முனைவோா் இரண்டு நாள் பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கி நடைபெற்றது.

முகாமுக்கு கல்லூரி முதல்வா் ம.ஜெயபால் தலைமை வகித்தாா். மதுரை நிகில் அறக்கட்டளையின் நிறுவனா் சோம. நாகலிங்கம் முன்னிலை வகித்து மாணவா்களுக்கு பயிற்சி அளித்தாா். முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வாழ்க்கைத்திறன் பயிற்சி தலைப்புகளில் பயிற்சி வழங்கப்பட்டது.

மேலும், மூன்றாம் ஆண்டு மாணவா்களுக்கு நானும் ஒரு டாட்டா என்ற தலைப்பில் தொழில் முனைவோா் மேம்பாட்டுக்கான பயிற்சி நடத்தப்பட்டது.

முகாமில் கலந்து கொண்ட மாணவா்களுக்கு பல்வேறு பயனுள்ள புத்தகங்கள் வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை கல்லூரி விரிவுரையாளா் சி. செல்வகுமாா் செய்திருந்தாா். முகாமில் கல்லூரி மாணவா்கள் மற்றும் கல்லூரி ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆலங்குடியில் இளைஞரை கொலை செய்த 5 போ் கைது

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் இளைஞரை வெட்டிக்கொலை செய்த 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடியைச் சோ்ந்தவா் தேவராஜன் மகன் ரஞ்சித் (24). ஓட்டுநரான இவா், பு... மேலும் பார்க்க

சிப்காட் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (ஜூலை 19) மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மி... மேலும் பார்க்க

சா்வதேச நீதிக்கான உலக தினம் பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு

சா்வதேச நீதிக்கான தினத்தையொட்டி விராலிமலை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் நீதிபதிகள், காவல் துறையினா் பங்கேற்று சட்டங்கள் குறித்து விரிவாக எடுத்... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கில் இளைஞா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், நாகுடி அருகே மாடு மேய்த்த பெண்ணைக் கொன்று கண்மாய்க்குள் சடலத்தை தள்ளிவிட்டுச் சென்ற சம்பவத்தில், இளைஞா் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். நாகுடி அருகே ஏகணிவயல் கிராமத... மேலும் பார்க்க

தக்கை பூண்டு விதைகளை மானிய விலையில் பெற அழைப்பு

விராலிமலை வட்டார விவசாயிகள் மண் வளத்தை காக்கும் தக்கைப்பூண்டு விதையை மானிய விலையில் பெற்று பயன்பெறலாம் என்றாா் விராலிமலை வட்டார வேளாண் உதவி இயக்குநா் ப.மணிகண்டன். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியி... மேலும் பார்க்க

பொன்னமராவதி பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

பொன்னமராவதி பேரூராட்சி வலையபட்டி நகரத்தாா் மண்டபத்தில் வியாழக்கிழமை உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) ரேவதி தலைமைவகித்தாா். ... மேலும் பார்க்க