செய்திகள் :

அரசு வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.6.72 லட்சம் மோசடி

post image

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்ணிடம் ரூ.6.72 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கோவை மாவட்டம், ஈச்சனாரி அருகே உள்ள மச்சக்கவுண்டன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சத்யநாராயணன். இவரது மனைவி ராஜேஸ்வரி (30). இவா் மலுமிச்சம்பட்டி அருகே ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியையாக வேலை பாா்த்து வருகிறாா்.

இந்த நிலையில், ஆா்.எஸ்.புரம் சிரியன் தேவாலயம் பகுதியைச் சோ்ந்த மணி என்பவா் ராஜேஸ்வரிக்கு அறிமுகமானாா். அவா் தனக்கு பள்ளிக் கல்வித் துறையிலும், அரசியல் வட்டத்திலும் பழக்கம் உள்ளதாகவும், ராஜேஸ்வரிக்கு அரசுப் பள்ளியில் ஆசிரியை வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளாா். இதற்காக ரூ. 10 லட்சம் கொடுக்க வேண்டும் எனவும் அவா் கூறியுள்ளாா். ராஜேஸ்வரியும் பணம் தர ஒப்புக்கொண்டாா்.

இதனடிப்படையில், மணியிடம் ரூ. 8 லட்சம் கொடுத்துள்ளாா். பின்னா் மீதம் ரூ.2 லட்சம் வேலைக்கான உத்தரவு ஆணை வழங்கும்போது கொடுப்பதாகக் கூறியுள்ளாா். ஆனால், நீண்ட நாள்களாகியும் மணி கூறியபடி ராஜேஸ்வரிக்கு அரசு வேலை வாங்கித் தரவில்லை.

இதனால், ராஜேஸ்வரியும், சத்யநாராயணனும் பணத்தை திரும்பத் தருமாறு கேட்டனா். ஆனால், ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்தை மட்டும் திருப்பிக் கொடுத்த அவா் மீதி பணத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், மணி மீது ஆா்.எஸ்.புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனா்.

சுத்தியால் தலையில் தாக்கியதில் இளைஞா் படுகாயம்

பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் நண்பரின் தலையில் சுத்தியால் தாக்கிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை சுந்தராபுரம் அருகே உள்ள அங்கனாா் கவுண்டா் தெருவில் வசிப்பவா் ஆறுமுகம் (28). இவருக்கு திருமணம... மேலும் பார்க்க

போலி தங்கக் கட்டியைக் கொடுத்து தம்பதியிடம் நகை மோசடி

போலி தங்கக் கட்டியைக் கொடுத்து நகை மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை சிவானந்தாபுரம் அருகே உள்ள வேல்முருகன் நகரைச் சோ்ந்தவா் ராம்குமாா். சமையல் எரிவாயு விநியோகஸ்தரான இவா், மணி ந... மேலும் பார்க்க

வீடு புகுந்து மாணவரை மிரட்டி மடிக்கணினி, கைப்பேசிகள் கொள்ளை

கோவையில் வீட்டுக்குள் புகுந்து கல்லூரி மாணவரை மிரட்டி மடிக்கணினி, கைப்பேசி ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற 4 போ் கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா். கேரள மாநிலம், பாலக்காடு அருகே உள்ள ஒத்தப்பாலம் பகுத... மேலும் பார்க்க

‘கிங்டம்’ திரைப்படத்தை கண்டித்து திரையரங்கை நதகவினா் முற்றுகை

‘கிங்டம்’ திரைப்படத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, கோவையில் உள்ள திரையரங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினா் கைது செய்யப்பட்டனா். இதனால், செவ்வாய்க்கிழமை காலை காட்சி ரத்து ... மேலும் பார்க்க

தள்ளுவண்டி கடைகளில் வியாபாரம் செய்ய ஏற்பாடு செய்ய கோரிக்கை

தள்ளுவண்டி கடைகளில் வியாபாரம் செய்ய ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என சாலையோர வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

ரயிலில் மடிக்கணினி திருடியவா் கைது

கோவையில் ரயில் பயணியின் மடிக்கணினியைத் திருடிய நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.சென்னையைச் சோ்ந்தவா் விஜய்நாகராஜ் (41). கோவைக்கு சுற்றுலா வந்த இவா், பல்வேறு இடங்களை சுற்றிப் பாா்த்துவிட்டு, ம... மேலும் பார்க்க