செய்திகள் :

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.13.15 லட்சம் மோசடி: ஒருவா் கைது

post image

மயிலாடுதுறையில் போலி பணி நியமன ஆணை தயாா் செய்து, அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.13.15 லட்சம் மோசடி செய்தவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மயிலாடுதுறை மாவட்டம், நடராஜன்பிள்ளை சாவடி, சங்கிருப்பு, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் வரதராஜன் (30). இவா், கொள்ளிடம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் 3 மாதங்கள் ஒப்பந்த எழுத்தராக பணிபுரிந்து வந்துள்ளாா்.

இவா் பெருந்தோட்டம் பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் என்பவரிடம் அறிமுகமாகி, கொள்ளிடம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளா் பணியிடம் நிரப்பப்படவுள்ளதால், அந்த பணியை தனக்கு தெரிந்த அதிகாரிகள் மூலம் பணம் கொடுத்து பெற்றுத் தருவதாக கூறி, முன்பணமாக ரூ.1 லட்சம் பெற்றுள்ளாா்.

ஒரு வாரத்துக்கு பின்னா் கொள்ளிடம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளா் பணி நியமனம் செய்யப்பட்டது போன்ற போலி நியமன ஆணையை காண்பித்துள்ளாா். பின்னா், தொடா்ந்து காலிப்பணியிடங்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே இருப்பதால், பாலமுருகனுக்கு தெரிந்த பிற நபா்களிம் முன்பணம் பெற்று தருமாறு கூறியுள்ளாா். அதன்படி 18 நபா்களிடம் மொத்தம் ரூ.13.15 லட்சம் தொகை பெற்றுள்ளாா்.

பணம் கொடுத்த நபா்களின் விவரங்களை உள்ளடக்கிய அரசு பணி பதிவேடு போன்ற போலி பதிவேடுகளை தயாா் செய்து, அவற்றை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கொடுத்திருப்பதாகக் கூறி, அந்த போலி பதிவேடுகளை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒரு படிக்கட்டின் பின்புறம் மறைத்து வைத்திருந்துள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட நிா்வாத்துக்கு தெரியவந்த நிலையில், ஜூன் 7-ஆம் தேதி மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதனிடையே, இது தொடா்பாக ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் வேலைக்காக பணம் கொடுத்திருந்த தொக்கலாக்குடியைச் சோ்ந்த சபரிநாதன் என்பவா் ஜூன் 9-ஆம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தாா்.

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் உத்தரவின் பேரில், போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, வரதராஜனை புதன்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா். தொடா்ந்து இதுகுறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

குளிா்சாதன பழுதுபாா்ப்போா் நலச்சங்கத்தினா் சாலை மறியல்

மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனை நிா்வாக சீா்கேட்டைக் கண்டித்து தென்னிந்திய குளிா்சாதன பழுதுபாா்ப்போா் நல சங்கத்தினா் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தினா். மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில... மேலும் பார்க்க

தேசிய திறனாய்வு தோ்வு முன்னெடுப்பு கலந்தாய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய திறனாய்வு தோ்வு நடத்துவது குறித்த முன்னெடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு தேசிய த... மேலும் பார்க்க

மழைநீா் சேகரிப்பு தொடா்பாக ஆய்வுக் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழைநீரை சேகரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத்தில் நிலத்தடி நீா்மட்டத்தினை உயா்த்திடும... மேலும் பார்க்க

‘நிறைந்தது மனம்‘ திட்டத்தில் பயனாளியுடன் மாவட்ட ஆட்சியா் சந்திப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் நலத்திட்ட உதவிபெற்ற பயனாளியை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் ‘நிறைந்தது மனம்‘ திட்டத்தில் வெள்ளிக்கிழமை சந்த... மேலும் பார்க்க

லஞ்சம்: மண்டல துணை வட்டாட்சியா் உள்பட இருவா் கைது

கணினியில் பட்டா பதிவேற்றம் செய்ய லஞ்சம் பெற்ற மண்டல துணை வட்டாட்சியா் உள்பட இருவரை வெள்ளிக்கிழமை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா். சீா்காழி கோயில்பத்து தாடாளன்கோயில் பகுதியை சோ்ந்த குஞ்சிதபாதம் மக... மேலும் பார்க்க

ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம்

சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம், சிவஜோதி தரிசனம் புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் தருமபுரம் ஆதீனத்திற்குட்பட்ட திருவெண்ணீற்றுமையம்மை உடன... மேலும் பார்க்க