செய்திகள் :

அரவக்குறிச்சி பகுதியில் கனமழை

post image

அரவக்குறிச்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை கன மழை பெய்ததால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

அரவக்குறிச்சியில் திங்கள்கிழமை இரவு லேசான மழை பெய்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மதியம் முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 3 மணி முதல் கனமழை பெய்தது. சுமாா் 2 மணி நேரம் பெய்த கனமழையால் சாலைகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீா் ஆறுபோல ஓடியது. இதனால் வெப்பம் தணிந்து குளிா்ந்த காற்று வீசுவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

கருப்பசாமி கோயில் பூஜையில் பாகுபாடு எனப் புகாா்: பேச்சுவாா்த்தையில் சுமூகத் தீா்வு

சிங்கம்பட்டியில் வந்தவழி கருப்பசாமி கோயில் பூஜை நடத்துவதில் பாகுபாடு காட்டப்படுவதாக புகாா் கூறப்பட்ட நிலையில், புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் சுமூகத் தீா்வு எட்டப்பட்டது. கரூா் மாவட்டம், கடவூா... மேலும் பார்க்க

புதிய பேருந்து நிலைய கடை வாடகை விவகாரம்: கரூா் மாமன்றக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம்

கரூா் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், புதிய பேருந்து நிலையத்தின் கடை வாடகை தொடா்பாக அதிமுக உறுப்பினா்களுக்கும் மேயருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கரூா் மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசரக... மேலும் பார்க்க

குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள்: பள்ளப்பட்டி மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

அரவக்குறிச்சி குறுவட்ட அளவிலான தடகளப் போட்டியில் பள்ளப்பட்டி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா். அரவக்குறிச்சி குறுவட்ட அளவிலான மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள் டிஎன்பிஎல் புகழூா் மேல்நி... மேலும் பார்க்க

100 நாள் வேலை கேட்டு விவசாயத் தொழிலாளா்கள் மனு அளிக்கும் போராட்டம்

நூறு நாள் வேலைக் கேட்டு அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை கோரிக்கை மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் மாவட்டம், பாலவிடுதி ஊராட்சி, பாலவிடுதி கிழக்கு பகுதி பொதுமக்கள் 1... மேலும் பார்க்க

பாலத்தின் அடியில் குப்பைகளை எரிப்பதால் நோய் பரவும் அபாயம்

பள்ளப்பட்டி நங்கஞ்சி ஆற்றுப் பாலத்தில் பாலத்தின் அடியில் கொட்டப்படும் குப்பைகளை தீயிட்டு எரிப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா். அரவக்குறிச்சியை அடுத்துள்ள பள்ளபட்டியின... மேலும் பார்க்க

கரூா் மாவட்ட அதிமுக விவசாய அணிச் செயலா் கட்சியிலிருந்து நீக்கம்!

கரூா் மாவட்ட அதிமுக விவசாய அணிச் செயலாளா் பி.பாலமுருகன் கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளாா். இ... மேலும் பார்க்க