மிசோரமில் புதிய ரயில் பாதை: செப். 13ல் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!
அரியலூரில் முன்னாள் படை வீரா்களுக்கான இலவச சட்ட உதவி மையம் திறப்பு
அரியலூரிலுள்ள பல்துறை வளாகத்தில் செயல்பட்டு வரும் முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் இலவச சட்ட உதவி மையம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதியுமான மலா்வாலண்டினா, இலவச சட்ட உதவி மையத்தை திறந்துவைத்து, இந்தச் சட்ட உதவி மையம் புதன்கிழமை தோறும் செயல்படும். முன்னாள் படை வீரா்கள், தங்களின் சட்டம் சாா்ந்த மற்றும் சட்டம் சாராத பிரச்னைகளுக்கு இங்கு இலவச சட்ட உதவியை பெறலாம்.மேலும், அனைத்து விதமான சட்ட ஆலோசனைகளையும் பெறலாம் .24 மணி நேரமும் சட்ட உதவி பெற 15100 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடா்புக் கொள்ளலாம் என்றாா்.
விழாவில் அரியலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலா் ராதாகிருஷ்ணன், உதவி இயக்குநா் கலையரசி, வழக்குரைஞா் திலகவதி மற்றும் அலுவலக ஊழியா்கள், சட்ட தன்னாா்வலா்கள், முன்னாள் படை வீரா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.