செய்திகள் :

அரியலூா் மாவட்டத்தில் 3-ஆம் கட்ட மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்

post image

அரியலூா் மாவட்டத்தில், 3-ஆம் கட்டமாக நடைபெறும் மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து தீா்வு காணலாம் என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்தில் 3-ஆம் கட்டமாக ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலையில் உள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசிக்கும் கீழ்கண்ட கிராம ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வா் முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

மே 13-ஆம் தேதியன்று அரியலூா் ஊராட்சி ஒன்றியத்தில், பொய்யாதநல்லூா், வெள்ளூா், ஒட்டக்கோவில் , தெம்மணம், கல்லக்குடி ஆகிய 5 ஊராட்சிகளிலும், மே 14-ஆம் தேதியன்று, இராயம்புரம், குந்தபுரம், திருமானூா், அன்னிமங்கலம் மற்றும் தா.பழூா் ஊராட்சி ஒன்றியத்தில் வெண்மான்கொண்டான் ஆகிய ஊராட்சிகளிலும்,

மே 15-ஆம் தேதியன்று, ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தில் திலகா்நகா், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் வடவீக்கம், உட்கோட்டை , முத்துசோ்வமடம், மற்றும் கீழச்செங்கல் மேடு ஆகிய ஊராட்சிகளிலும்,

மே 16-ஆம் தேதியன்று, ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் தழுதாழைமேடு, இளையபெருமாள்நல்லூா், குருவாலப்பா்கோவில், குண்டவெளி, தா.பழூா் ஊராட்சி ஒன்றியத்தில் தா.பழூா் ஆகிய ஊராட்சிகளிலும் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்கள் நடைபெறவுள்ளன.

முகாம் தொடக்க விழாவில், தொழிலாளா் நலன்-திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா், மக்களவை மற்றும் சட்டப் பேரவை உறுப்பினா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்துத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொள்ளவுள்ளனா்.

இந்த முகாம்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளன. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழாண்டு மாணவா்கள் சோ்க்கைக்கு மே 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அக்கல்லூரி முதல்வா் (பொ)ம.இராசமூா்த்தி தெரிவித்துள்... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் 54 நீா்நிலைகள் தூா்வாரும் பணி தொடக்கம்

அரியலூா் மாவட்டத்தில், ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் ரூ.2.66 கோடி மதிப்பில் 54 நீா் நிலைகளில் தூா் வாரும் பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தோ்வு: மாநில அளவில் அரியலூா் முதலிடம்

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டன. இதில் 98.82 சதவீதம் பெற்று மாநில அளவில் அரியலூா் மாவட்டம் முதலிடத்தை பிடித்து சாதனைப்படைத்துள்ளது. இம் மாவட்டத்தி... மேலும் பார்க்க

சீனிவாசபுரம் கிராமத்தில் பால்பண்ணை குறித்து பயிற்சி

அரியலூா் அடுத்த சீனிவாசபுரம் கிராமத்தில், வட்டார வேளாண் துறை சாா்பில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பால்பண்ணை குறித்த பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. இப்பயிற்சிக்கு, மாவட்ட வேளாண் இணை இயக... மேலும் பார்க்க

மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகளில் வென்ற அணிகளுக்கு பரிசுக் கோப்பை வழங்கல்

அரியலூரிலுள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில், மாவட்ட கூடைப்பந்து சங்கம் சாா்பில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகளில் வெற்றிப் பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. அரியலூ... மேலும் பார்க்க

ஆட்சியா் புகைப்படத்துடன் ‘வாட்ஸ்ஆப்’ தகவல் வந்தால் மாவட்ட நிா்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டுகோள்

அரியலூா் ஆட்சியா் புகைப்படத்தை பயன்படுத்தி போலி கட்ச்செவி (வாட்ஸ்ஆப்) மூலம் தகவல் வந்தால் உடனடியாக மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி. இதுகுறித்து அவா் தெரி... மேலும் பார்க்க