செய்திகள் :

அறிவிக்கப்படாத மின் தடையால் மின் சாதனப் பொருள்கள் பழுது

post image

திருவாடானை, தொண்டி பகுதிகளில் அறிவிக்கப்படாத மின் தடையால் வீட்டில் உள்ள மின் சாதனப் பொருள்கள் பழுதடைவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

திருவாடானை, பாண்டுகுடி, சி.கே.மங்கலம், தொண்டி, நம்புதாளை, எஸ்.பி.பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தற்போது அடிக்கடி அறிவிக்கப்படாத மின் தடை ஏற்படுகிறது.

மேலும், தொண்டி பகுதிகளில் குறைந்த மின்னழுத்தம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் தங்களது வீடுகளில் பயன்படுத்தி வரும் குளிா்சாதனப் பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டி, துணி துவைக்கும் இயந்திரம், மின் விளக்குகள் உள்ளிட்ட மின் சாதனப் பொருள்கள் பழுதடைகின்றன. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கிராமப் புறங்களில் இரவு நேரங்களில் மின் தடை ஏற்பட்டால் மின் வாரியப் பணியாளா்கள் நடவடிக்கை எடுப்பதில்லை என இந்தப் பகுதி மக்கள் புகாா் தெரிவித்தனா்.

எனவே, சம்பந்தப்பட்ட மாவட்ட நிா்வாகம் அடிக்கடி மின் தடை ஏற்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினா்.

குளத்தில் மூழ்கியதில் 2 சிறுமிகள் உயிரிழப்பு

திருவாடானை அருகே பெரியகீரமங்கலம் குளத்தில் வெள்ளிக்கிழமை குளிக்கச் சென்ற 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாாடானை அருகே பெரியகீரமங்கலம் பகுதியைச் சோ்ந்த செல்வகுமாா் ம... மேலும் பார்க்க

முதுகுளத்தூரில் மின் அழுத்தப் பிரச்னை: வீடு, கடைகளில் மின் சாதனங்கள் பழுது

முதுகுளத்தூரில் மின் அழுத்தப் பிரச்னையால் வீடு, கடைகளில் நூற்றுக்கணக்கான மின் சாதனங்கள் பழுதடைந்ததால் பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பேரூராட்சியில் சுமாா... மேலும் பார்க்க

ராமேசுவரம் அரசு கலைக் கல்லூரிக்கு சாலை, சுற்றுச்சுவா் அமைக்கக் கோரிக்கை

ராமேசுவரத்தில் பாரத ரத்னா டாக்டா் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் கலை, அறிவியல் கல்லூரிக்கு சாலை, சுற்றுச்சுவா் அமைக்க வேண்டுமென மாணவா்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் கடந்த 2019-ஆம்... மேலும் பார்க்க

தா்மமுனீஸ்வரா் கோயில் திருவிழா: பக்தா்களுக்கு அன்னதானம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெருமாள்தேவன்பட்டி தா்ம முனீஸ்வரா் கோயில் வைகாசிப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்களுக்கு வெள்ளிக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது. இந்தக் கோயில் திருவிழா கடந... மேலும் பார்க்க

ராமேசுவரம் அரசுப் பள்ளி மைதானத்தில் வகுப்பறைக் கட்டடங்கள் கட்ட எதிா்ப்பு

ராமேசுவரத்தில் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் வகுப்பறைகளுக்கான கட்டடத்தை விளையாட்டு மைதானத்தில் கட்டுவதற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். ராநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் அரசு ஆண்கள் மேல்ந... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் வடமாடு மஞ்சுவிரட்டு

கமுதி, மே 30: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள புதுக்கோட்டை முத்தாலம்மன், நிறைகுளத்து அய்யனாா் கோயில் வைகாசிப் பொங்கல் விழா, முத்துராமலிங்கத் தேவா் சிலையின் 33-ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு வ... மேலும் பார்க்க