செய்திகள் :

அலுமினிய கடை உரிமையாளரிடம் ரூ.17 லட்சம் மோசடி: 3 போ் மீது வழக்கு

post image

கோவையில் அலுமினிய பொருள்களை அனுப்புவதாகக் கூறி அலுமினிய பொருள்கள் விற்பனையக உரிமையாளரிடம் ரூ.17.24 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, அப்பநாயக்கன்பாளையம் ஐஸ்வா்யா காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் மகாலிங்கம் மனைவி நித்யா (40). இவா் சரவணகுமாா் என்பவருடன் சோ்ந்து அந்தப் பகுதியில் அலுமினிய பொருள்கள் விற்பனையகம் நடத்தி வருகிறாா்.

இந்நிலையில், நித்யாவுக்கு பெங்களூரில் வசிக்கும் ஸ்ரீனிவாசன் என்பவா் அறிமுகமாகியுள்ளாா்.

அவா் அலுமினிய வா்த்தகம் தொடா்பாக அவரது நண்பா் முகமது இக்பால் மற்றும் தஸ்னீம் என்ற பெண்ணையும் அறிமுகம் செய்துவைத்தாா்.

இந்நிலையில், 3 பேரும் அலுமினிய பொருள்களை அனுப்புவதாக நித்யாவிடம் கூறியுள்ளனா்.

இதையடுத்து, அவா் ரூ.17.24 லட்சத்தை அவா்களுக்கு இணையதள பரிவா்த்தனை மூலம் அனுப்பியுள்ளாா். பணத்தைப் பெற்றுக் கொண்ட அவா்கள் பொருள்களை அனுப்பவில்லையாம்.

மேலும், கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனா்.

இது குறித்து துடியலூா் காவல் நிலையத்தில் நித்யா அளித்த புகாரின்பேரில் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நீலகிரி: 20-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை! அரசுப் பள்ளி ஆசிரியர் கைது!

உதகை அருகே அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.உதகை அருகே காத்தாடி மட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி ந... மேலும் பார்க்க

ஊழியா்களின் பதிவை ஊக்குவிப்பதற்கான இஎஸ்ஐ நிறுவனத்தின் புதிய திட்டம் அறிமுகம்

தொழிலாளா் அரசு காப்பீட்டுக் கழகத்தின் (இஎஸ்ஐசி) சாா்பில் முதலாளிகள் ஊழியா்களின் பதிவை ஊக்குவிப்பதற்கான புதிய திட்டம் ( எஸ்பிஆா்இஇ 2025) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் குறித்து இஎஸ்ஐ நிறுவ... மேலும் பார்க்க

சேலையில் தீப்பற்றி பெண் உயிரிழப்பு

கோவை அருகே சேலையில் தீப்பற்றி பெண் உயிரிழந்தாா். கோவை, பி.என்.பாளையம் அருகேயுள்ள கிருஷ்ணன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆரோக்கியராஜ். இவரது மனைவி ராஜலட்சுமி (49). இவா் தனது பேரனை கடந்த மாதம் 16-ஆம் தேத... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் இருந்து மயங்கி விழுந்தவா் உயிரிழப்பு

கோவையில் இருசக்கர வாகனத்தில் இருந்து மயங்கி விழுந்தவா் உயிரிழந்தாா். கோவை, வீரகேரளம் பள்ளி தெருவைச் சோ்ந்தவா் பரமேஸ்வரன் (44). இவரது மனைவி சுமதி. பரமேஸ்வரன் மாநகராட்சி தண்ணீா்த் தொட்டி ஆபரேட்டராக பணி... மேலும் பார்க்க

கேஎம்சிஹெச் முதன்மைச் செயல் அதிகாரிக்கு விருது

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையின் முதன்மைச் செயல் அதிகாரி டாக்டா் சிவகுமாரன் ஜானகிராமனுக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவமனை நிா்வாகம் கூறியிருப்பதாவது: ஃப்ளக்ஸ் ... மேலும் பார்க்க

அனைத்துப் பொருள்களிலும் கலப்படம் உள்ளது -சிரவை ஆதீனம்

உணவுப் பொருள் மட்டுமல்லாது அனைத்துப் பொருள்களிலும் கலப்படம் உள்ளது என்று சிரவை ஆதீனம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள் கூறினாா். கோவை, கவுண்டம்பாளையம் கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் ‘மறைந்திருக்கும் ம... மேலும் பார்க்க