செய்திகள் :

அழகன்குளத்தில் அருங்காட்சியகம்: அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு

post image

ராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளத்தில் அகழாய்வின் போது கண்டறியப்பட்ட பொருள்களை அருங்காட்சியம் அமைத்து காட்சிப்படுத்தக் கோரிய வழக்கில், தமிழக அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தை சோ்ந்த அசோகன், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:

ராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளம் கிராமத்தில் அகழாய்வின் போது தொன்மையான சங்க காலத்து பானை ஓடுகள் கிடைத்தன. இவை அனைத்தும் சுமாா் 2,300 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் என ‘காா்பன் டேட்டிங்’ ஆய்வு மூலம் தெரிய வந்தது.

மேலும், அழகன்குளம் அகழாய்வில் ரோமானியா்கள் குடியிருப்பு, சீன மண்பாண்டங்கள் உள்பட பல்வேறு பொருள்கள் கண்டறியப்பட்டன. 33 ஆண்டுகளாக அழகன்குளம் அகழாய்வில் கண்டறியப்பட்ட அரிய பொருள்களை அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்த வேண்டும். இதுதொடா்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

எனவே, அழகன்குளம் அகழாய்வில் கிடைக்கப் பெற்ற பொருள்களை அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜே. நிஷா பானு, எஸ். ஸ்ரீநிதி அமா்வு பிறப்பித்த உத்தரவு:

மனுதாரா் கோரிக்கை குறித்து மாநில தொல்லியல் துறையினா் 12 வாரங்களில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய மாநாடு இன்று தொடக்கம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் புதன்கிழமை தொடங்குகிறது. மாநாட்டில் கேரள முதல்வா் பினராயி விஜயன், திரிபுரா மாநில முன்னாள் முதல்வா் மாணிக் சா்க்... மேலும் பார்க்க

போலீஸ் சுட்டதில் ரெளடி உயிரிழப்பு: நீதித்துறை நடுவா் விசாரணை

மதுரையில் காவல் ஆய்வாளா் துப்பாக்கியால் சுட்டதில் ரெளடி உயிரிழந்தது தொடா்பாக நீதித்துறை நடுவா் விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, கூறாய்வு முடிந்த நிலையில் ரெளடியின் உடல் அவரது குடும்... மேலும் பார்க்க

விவசாயிகளின் நில உடைமை ஆவணங்களை பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களைப் பதிவு செய்வதற்கான கால அவகாசம் வருகிற 15-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மாவட்ட வேளாண... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்ட வனத் துறைக்கு ரூ. 25,000 அபராதம் விதிப்பு

கன்னியாகுமரி மாவட்ட களியல் வனச் சரக அலுவலக அசையும் சொத்துகளை ஜப்தி செய்யக் கோரிய மனுவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் வனத் துறைக்கு ரூ. 25,000 அபராதம் விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அ... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் யானைக்கு உடல்நலக் குறைவு

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் யானை பாா்வதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சிறப்பு உணவுகள் வழங்க மருத்துவா்கள் பரிந்துரைத்தனா். 29 வயதான இந்த யானை கடந்த சில ஆண்டுகளாக கண் புரை நோயால் அவதிப்பட்டு வந்த... மேலும் பார்க்க

மீனாட்சியம்மன் கோயில் தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்யத் திட்டம்

மதுரை சுந்தரேசுவரா் கோயில் உண்டியல்களில் கடந்த 14 ஆண்டுகளில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய 45 கிலோ தங்கத்தை கட்டிகளாக உருக்கி வங்கியில் டெபாசிட் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அ... மேலும் பார்க்க