செய்திகள் :

ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் வரி; இந்தியா உள்ளிட்ட நாடுகளை மிரட்டும் ட்ரம்ப் - காரணம் என்ன?

post image

ஏப்ரல் 2-ம் தேதி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிற நாடுகள் மீது 'பரஸ்பர வரியை' அறிவிக்க, உலக நாடுகளின் பொருளாதாரம் ஆட்டம் கண்டது.

இதனையடுத்து, ஏப்ரல் 9-ம் தேதியில் இருந்து அடுத்த 90 நாள்களுக்கு, இந்தப் பரஸ்பர வரி விதிப்பு ஒத்தி வைக்கப்படுகிறது. இந்தக் காலக்கட்டத்தில் அமெரிக்கா உடன் உலக நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கூறப்பட்டது.

டொனால்டு ட்ரம்ப்
டொனால்டு ட்ரம்ப்

இந்த நிலையில், ட்ரம்ப் நேற்று கூறியுள்ளதாவது...

"உலக நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தம் பேச்சுவார்த்தை முடிவடைய போகிறது. இதனையடுத்து, எந்த நாடுகளுக்கு, எவ்வளவு வரி விதிப்பு என்பது ஜூலை 9-ம் தேதி அறிவிக்கப்படும்".

அந்த வரி விதிப்பு, வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ட்ரம்ப் அரசாங்கத்தின் வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் கொடுத்த இந்தக் கால அவகாசத்தில், பேச்சுவார்த்தை நடத்தாத உலக நாடுகளுக்கு கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அறிவிக்கப்பட்ட வரிகளே தொடரப்படும்.

பிரிக்ஸ் - 10% வரி!

பிரிக்ஸ் மாநாடு தற்போது நடந்து வருகிறது. இந்த நிலையில், ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில், 'BRICS-ன் அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் எந்தவொரு நாட்டிற்கும் கூடுதலாக 10 சதவிகித வரி விதிக்கப்படும். இந்தக் கொள்கைக்கு எந்த விதிவிலக்கும் இருக்காது" என்று பதிவிட்டுள்ளார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா நாடுகளைக் கொண்டது பிரிக்ஸ்.

இந்தியா உடன் பேச்சுவார்த்தை நல்லப்படியாக நடந்து வருகிறது என்று ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இந்த நிலையில், ட்ரம்ப் கூறியுள்ள இந்த 10 சதவிகித வரி இந்தியாவிற்கும் வருமா என்பது ஜூலை 9-ம் தேதி தெரியவரும்.

`மகாராஷ்டிரா எங்கள் பணத்தில் வாழ்கிறது..!' - தாக்கரே சகோதரர்களை விமர்சித்த பாஜக எம்.பி

மகாராஷ்டிராவில் வாழும் வெளிமாநிலத்தவர்கள் கட்டாயம் மராத்தி பேசவேண்டும் என்று ராஜ் தாக்கரே எச்சரித்துள்ளார். மராத்தி பேசமாட்டேன் என்று சொன்ன தொழிலதிபர் அலுவலகத்தை ராஜ் தாக்கரே கட்சி தொண்டர்கள் தாக்கி ச... மேலும் பார்க்க

ரஷ்யா: கருவுறும் பள்ளி மாணவிகளுக்கு ரூ.1,00,000 நிதி - புதின் திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு!

ரஷ்யாவில் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்து வருவதையடுத்து, சில மாகாணங்களில் கர்ப்பம் தரிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு குழந்தைப் பேறுக்காகவும், வளர்ப்புச் செலவுக்காகவும் அரசு சார்பில் 1,00,000 ரூபிள்கள்... மேலும் பார்க்க

``நாங்கள் கூட்டணி அமைத்தால் மட்டும் பாஜக மதவாத கட்சியா?'' - ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

"மிசாவில் உங்களை கைது செய்தவர்களுடன் நீங்கள் கூட்டணி வைக்கலாம்.. நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் என்ன தவறு" என்று ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. 2026 சட்டமன்ற தேர்தலை முன்னி... மேலும் பார்க்க

'நான் யாருன்னு தெரியல?' - திடீரென விசாரித்த அமைச்சர்... தெரியாமல் விழித்த அரசு பேருந்து ஊழியர்கள்

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேருந்துகளில் அவ்வப்போது திடீரென்று ஆய்வு செய்து பயணிகளின் குறைகளை கேட்டறிந்து வருவதை தனது அலுவல்களில் ஒன்றாக வைத்துள்ளார். அந்த வகையில், கோவையில் உள்ள கொடீச... மேலும் பார்க்க

'முருகர் மாநாட்டை நடத்திய பெருமை எங்களுக்கே உண்டு!' - அமைச்சர் சேகர் பாபு பெருமிதம்!

'திருச்செந்தூர் குடமுழுக்கு!'திருச்செந்தூர் முருகன் கோயிலின் குடமுழுக்கு வெகு விமர்சையாக நடந்து முடிந்திருக்கிறது. குடமுழுக்கு முடிந்த பிறகு அமைச்சர் சேகர் பாபு பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப... மேலும் பார்க்க

இறைவனை கூட பார்க்க முடியவில்லை; 2000 ஆண்டு கால பிரச்னை இது- முருகர் கோயிலில் செல்வப்பெருந்தகை வேதனை!

ஸ்ரீபெரும்புதூருக்கு அருகே உள்ள வல்லக்கோடை முருகன் கோயிலின் குடமுழுக்கு நிகழ்வு ஒன்றில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அனுமதிக்கப்படாதது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.செல்வப்பெருந்தகைமூலவர... மேலும் பார்க்க