செய்திகள் :

ஆக. 31க்குள் தூய்மைப் பணியாளர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்: மேயர் பிரியா

post image

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கேட்டுக்கொண்டுள்ளார்.

தூய்மைப் பணியாளர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், தூய்மைப் பணியாளர்களுக்கு என்றுமே பணி பாதுகாப்பு இருக்கும் என உறுதி கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6 ஆகியவற்றில் தூய்மைப் பணியானது தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கடந்த 1ஆம் தேதி முதல் ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் போராட்டத்துக்கு அதிமுக, தவெக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதனிடையே, போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர் சேகர் பாபு, அமைச்சர் கே.என்.நேரு, மேயர் பிரியா ஆகியோர் இன்று 8 ஆம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து 4 மணி நேரமாக பேச்சுவார்த்தை நடைபெற்றதாகத் தெரிகிறது. இதில் உடன்பாடு எட்டப்படவில்லை என தூய்மைப் பணியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு மேயர் பிரியா கூறியதாவது,

''பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு ஆகிய கோரிக்கைகளை தூய்மைப் பணியாளர்கள் தரப்பில் முன்வைத்தனர். தூய்மைப் பணியாளர்களுக்கு எப்போதுமே பணிப்பாதுகாப்பு உண்டு. இதனால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

முன் எப்போதும் இல்லாத வகையில் பணியில் பாதுகாப்பு இருக்கிறது. பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் மீண்டும் பணியில் சேர வேண்டும். பிற கோரிக்கைகள் குறித்து ஒரே நாளில் முடிவு எடுக்க முடியாது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கலாம்'' எனத் தெரிவித்தார் .

இதையும் படிக்க | சுதந்திர நாள் விழா: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

Chennai Corporation Mayor Priya has requested that the striking sanitation workers return to work by August 31st.

விஜயகாந்த் கட்டிய மேம்பாலத்தில் விழுந்து வணங்கிய பிரேமலதா

கள்ளக்குறிச்சி ரிஷிவந்தியம் தொகுதியில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்டிய மேம்பாலத்தை விழுந்து வணங்கினார் பிரேமலதா.தமிழகம் முழுவதும் தேமுதிகவின் பிரசாரத்தை முன்னெடுக்கும் வகையில், மக்களைத் தேடி ரத யாத்... மேலும் பார்க்க

தமிழக காவல்துறையில் 21 பேருக்கு குடியரசு தலைவர் விருது! யார்யார்?

சுதந்திர தினத்தையொட்டி, தமிழக காவல்துறையில் 23 பேர் குடியரசுத் தலைவர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.சுதந்திர தினத்தையொட்டி, நாடு முழுவதும் காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றி வருவோருக்கு குடிய... மேலும் பார்க்க

தொடர் விடுமுறை: ஆம்னி பேருந்து, விமானங்களில் கட்டணம் பல மடங்கு அதிகரிப்பு!

சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி தொடர் விடுமுறையை அடுத்து ஆம்னி பேருந்து மற்றும் விமானக் கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது.சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை என நாளைமுதல் தொடர்ந்து மூன்று... மேலும் பார்க்க

பாஜகவுடன் கைகோத்த தோ்தல் ஆணையம் - திமுக விமா்சனம்

பாஜகவுடன் கைகோத்து தோ்தல் ஆணையம் செயல்படுவது கவலையளிப்பதாக திமுக விமா்சித்துள்ளது. நோ்மையான முறையில் வாக்காளா் பட்டியலைச் சரிபாா்க்க வேண்டும் என்று தோ்தல் ஆணையத்தை திமுக வலியுறுத்தியுள்ளது. திமுக ... மேலும் பார்க்க

ஹுண்டாய் சாா்பில் 12 ஏக்கரில் 5,500 மரங்களுடன் குறுங்காடு

ஹுண்டாய் மோட்டாா் இந்தியா பவுண்டேஷன் சாா்பில், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் 5,500 மரங்களுடன் குறுங்காடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குறுங்காட்டை பாா்வையிட பள்ளி மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்... மேலும் பார்க்க

2 மாநகராட்சிகள், 3 நகராட்சிகளுக்கு விருது: முதல்வா் மு.க.ஸ்டாலின் நாளை வழங்குகிறாா்

சுதந்திர தினத்தின்போது, கோட்டை கொத்தளத்தில் முதல்வரால் வழங்கப்படும் விருதுப் பட்டியலில் ஆவடி, நாமக்கல் மாநகராட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதேபோன்று சிறந்த நகராட்சிகள் பட்டியலில் ராமேசுவரம், ராஜபாளையம், பெ... மேலும் பார்க்க