செய்திகள் :

ஆசிய கோப்பை: வங்கதேசத்துக்கு 144 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹாங் காங்!

post image

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய ஹாங் காங் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபு தாபியில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் வங்கதேசம் மற்றும் ஹாங் காங் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஹாங் காங் முதலில் பேட் செய்தது.

முதலில் விளையாடிய ஹாங் காங் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நிஸாகத் கான் 40 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, ஸீசன் அலி 30 ரன்களும், கேப்டன் யாசிம் முர்டாஸா 28 ரன்களும் எடுத்தனர்.

வங்கதேசம் தரப்பில் தன்சிம் ஹாசன் சாகிப், ரிஷாத் ஹொசைன் மற்றும் டஸ்கின் அகமது தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேசம் களமிறங்குகிறது.

Hong Kong, playing their first match against Bangladesh in the Asia Cup cricket series, scored 143 runs for the loss of 7 wickets.

இதையும் படிக்க: அடுத்த போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா; கபில் தேவ் கொடுத்த முக்கிய அறிவுரை!

ஆசிய கோப்பை: வங்கதேசத்துக்கு எதிராக ஹாங் காங் பேட்டிங்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹாங் காங்குக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபு தாபியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் வங்கதேச... மேலும் பார்க்க

அடுத்த போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா; கபில் தேவ் கொடுத்த முக்கிய அறிவுரை!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்கு முன்பாக இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் கபில் தேவ் அறிவுரை வழங்கியுள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று முன் தினம் ... மேலும் பார்க்க

அடுத்தடுத்து வீரர்கள் காயமடைவதால் பிரச்னையில் தென்னாப்பிரிக்க அணி!

அடுத்தடுத்து வீரர்கள் காயமடைவதால் தென்னாப்பிரிக்க அணி புதிய பிரச்னையை சந்திக்க உள்ளது.நடப்பு உலக டெஸ்ட் சாம்பியனான தென்னாப்பிரிக்க அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 ஆம் ஆண்டுக்கான சுழற்சிக்கான போட... மேலும் பார்க்க

குல்தீப் யாதவ் பந்துவீச்சைக் கணிக்க முடியாது: முன்னாள் பாகிஸ்தான் வீரர்!

இந்திய சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் புகழ்ந்து பேசியுள்ளார். ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை வரும் நிலையில் வாசிம் அக்ரம... மேலும் பார்க்க

தனது அபார பந்துவீச்சுக்கான ரகசியம் பகிர்ந்த ஷிவம் துபே!

இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஷிவம் துபே தனது அபார பந்துவீச்சுக்கான ரகசியம் பகிர்ந்துள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் துபையில் நேற்று (செப்டம்பர் 10) நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா மற்றும்... மேலும் பார்க்க

காயம் காரணமாக ஆரோன் ஹார்டி விலகல்..! புதிய ஆல்-ரவுண்டர் சேர்ப்பு!

இந்தியா ’ஏ’க்கு எதிரான தொடரிலிருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலிய ’ஏ’ அணியின் ஆல்ரவுண்டர் ஆரோன் ஆர்டி விலகியுள்ளார். தோல்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆரோன் ஆர்டி விலகியுள்ளது ஆஸி. அணிக்கு பின்னடைவை ஏற்... மேலும் பார்க்க