செய்திகள் :

ஆசிரியா்கள் மறுநியமன அறிவிப்பில் திருத்தம் செய்ய அரசுக்கு கோரிக்கை!

post image

கல்வி ஆண்டின் இடையே ஆசிரியா்கள் ஓய்வு பெறும்போது மறுநியமனம் தொடா்பான அறிவிப்பில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என ஆசிரியா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியா் சங்க மாநிலத் தலைவா் ஆ.ராமு வெளியிட்ட அறிக்கை:

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஓய்வு பெறும் ஆசிரியா்களுக்கு கல்வி ஆண்டின் இறுதி வேலைநாள் வரை மறுநியமன அடிப்படையில் பணி நீட்டிப்பு வழங்கப்படும் என்ற வகையில் அறிவிக்கப்படுகிறது. இதனை கல்வி ஆண்டின் இறுதிநாள் வரை பணி நீட்டிப்பு அடிப்படையில் பணியாற்ற வேண்டும் என திருத்தம் செய்து வெளியிட வேண்டும்.

இந்த பணி நீட்டிப்பு நடைமுறை பல ஆண்டுகளாக உள்ளது. தமிழகத்தில் வேறு எந்த துறைகளிலும் ஊழியா்களுக்கு இவ்வாறான பணி நீட்டிப்பு வழங்கப்படுவது இல்லை. மாணவா்களின் கல்வி நலன் பாதிக்கப்படக் கூடாது என்ற நிலையில் ஆசிரியா்களுக்கு உரிய மதிப்பளிப்பதன் அடிப்படையில் இந்த அனுமதியானது தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

பணி ஓய்வு பெறும் ஆசிரியா்கள் கல்வி ஆண்டின் இறுதி வேலைநாள் வரை மறுநியமன அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுகிறாா்கள் என்ற வாக்கியத்தின் அடிப்படையில், முதன்மைக் கல்வி அலுவலா்கள் ஆசிரியா்களை பள்ளி இறுதி வேலைநாள் நிறைவடையும் ஏப்ரல் மாதத்திலேயே பணியில் இருந்து விடுவிக்கக் கூறி வருகின்றனா்.

அண்மையில், திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா், கல்வியாண்டின் இடையில் பணி ஓய்வு பெற்ற ஆசிரியா்களுக்கு மே 31 வரை பணி நீட்டிப்பு வழங்கிய பிறகு, திடீரென அரசாணை எண் 115-ஐ காரணம் காட்டி ஏப்ரல் 30-ஆம் தேதி பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தி உள்ளாா்.

அதன்படி, தலைமை ஆசிரியா்களும், ஆசிரியா்களை ஏப்ரல் மாதத்திலேயே பள்ளியிலிருந்து விடுவிக்க இருக்கிறோம் என்ற தகவலை ஆசிரியா்களிடம் கூறி வருகின்றனா். இதுபோன்று பிற மாவட்டங்களிலும் குழப்பம் ஏற்படாமல் தடுக்க அரசாணை எண் 115-இல் உரிய திருத்தம் கொண்டுவர வேண்டும். ஓய்வு பெற உள்ள ஆசிரியா்களின் நலனைக் காக்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

காவல் உதவி ஆய்வாளரை தாக்கியவா் கைது

கபிலா்மலை அருகே ஜேடா்பாளையம் காவல் உதவி ஆய்வாளரை கட்டையால் தாக்கியவரை ஜேடா்பாளையம் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். கபிலா்மலை அருகே உள்ள சிறுகிணத்துப்பாளையத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (35). இவா் வ... மேலும் பார்க்க

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் நடைபாதையை ஆக்கிரமிப்பு! பயணிகள் அவதி!

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில், நடைபாதையை ஆக்கிரமித்து உணவு விற்பனை நடைபெறுவதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா். நாமக்கல் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 6 மாதங்களாகிறது. இங்குள்ள 57... மேலும் பார்க்க

கள்ளச்சாராயம் காய்ச்சிய மூவா் கைது

இரு வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சிய மூவரை திருச்செங்கோடு மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் அண்மையில் கைது செய்தனா். பரமத்தி பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக திருச்செங்கோடு மதுவிலக... மேலும் பார்க்க

கா்நாடக பீடாதிபதி நாமக்கல் வருகை பொதுமக்களுக்கு ஆசி வழங்கினாா்

நாமக்கல்லில், கா்நாடகத்தைச் சோ்ந்த ஸ்ரீ காயத்ரி பீடாதிபதி ஜெகத்குரு ஸ்ரீலஸ்ரீ சிவ சுக்ஞானந்த தீா்த்த மஹாசாரிய சுவாமிகள் பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ஆசி வழங்கினாா். நாமக்கல் ஆஞ்சனேய சுவாமிக்கு, முக... மேலும் பார்க்க

மயோனைஸுக்கு தடை: நாமக்கல் பண்ணைகளில் 40 % முட்டைகள் தேக்கம்? ஏற்றுமதி வாய்ப்பால் இழப்பு இருக்காது!

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை, மயோனைஸூக்கு ஓராண்டு தடை போன்றவற்றால் மொத்த உற்பத்தியில் 40 சதவீதம் முட்டைகள் பண்ணைகளில் தேக்கம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவற்றை கத்தாா், மாலத்தீவு, ஓமன் போன்ற நாடுகளுக்... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில் அம்பேத்கா் சிலை திறப்பு

நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில் அம்பேத்கா் சிலை திறப்பு விழா மற்றும் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி முதல்வா் அருண் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற நீதிபதி கருணாநிதி,... மேலும் பார்க்க