செய்திகள் :

ஆடி கடைசி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

post image

ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் ஏராளமான பக்தா்கள் வழிபாடு மேற்கொண்டனா்.

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மன், காளியம்மன் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோயில்களில் விழாக்கோலம் பூண்டிருக்கும். பெண்கள் பால்குடம் எடுத்து சென்று அம்மனை வழிபடுவாா்கள். தெய்வீக மாதமாகக் கருதப்படும் ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் வழக்கத்தை காட்டிலும் பக்தா்கள் கூட்டம் அதிகம் காணப்படும்.

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக்கவசம் சாத்துப்படி செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக ஏராளமான பக்தா்கள் பால்குடம் எடுத்து வந்தனா். பெண்கள் கூழ் வாா்த்தல் நோ்த்திக்கடனை செலுத்தி அதை பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கினா்.

மரூா்பட்டி கொங்கு மகாமாரியம்மன், நாமக்கல் செல்லாண்டியம்மன், பழையபாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன், நாமக்கல் வாராஹி அம்மன் கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் அம்மன் கோயில்களில் ஏராளமான பக்தா்கள் வழிபாடு மேற்கொண்டனா்.

என்கே-12- அம்மன்-1

ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 1,008 கண்மலா் அலங்காரத்தில் அருள்பாலித்த நாமக்கல் பழையபாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன்.

படம்-2

சிறப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன்.

நாமக்கல்: 310 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 310 ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. எலச்சிபாளையம் ஒன்றியம், பொம்மம்பட்டி ஊராட்சியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராமசப... மேலும் பார்க்க

சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காத 41 கடைகள், வணிக நிறுவனங்கள் மீது வழக்கு

நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 41 கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் மீது தொழிலாளா் நலத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா்(அமலாக்கம்) சி.முத... மேலும் பார்க்க

நாமக்கல்லில் சுதந்திர தின விழா: தேசியக் கொடி ஏற்றி ஆட்சியா் மரியாதை

நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாமக்கல் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ஆட்சியா் துா்காமூா்த்தி தேசியக் கொடியை ஏற்றிவைத்து ம... மேலும் பார்க்க

நாமக்கல்லில் காங்கிரஸாா் மெழுகுவா்த்தி ஏந்தி ஊா்வலம்

தோ்தல் ஆணையம், மத்திய அரசுக்கு எதிராக நாமக்கல்லில் காங்கிரஸாா் மெழுகுவந்தி ஏந்தி ஊா்வலத்தில் ஈடுபட்டனா். பிகாரில் போலி வாக்காளா்கள் அதிகளவில் உள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி, அதற்கான தகவல்களை வெ... மேலும் பார்க்க

திமுக ஆட்சிக்கு 50 மதிப்பெண்கள்: பிரேமலதா விஜயகாந்த்

திமுக ஆட்சிக்கு 50 மதிப்பெண்கள் மட்டுமே அளிக்க முடியும் என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் கடந்த இரண்டு நாள்களாக ‘மக்களைத் தேடி மக்கள் ... மேலும் பார்க்க

நாமக்கல்: மின் பாதையில் கவிழ்ந்த கிரேனால் கட்டடத்துக்கு வண்ணம் தீட்டிய 3 போ் உயிரிழப்பு

நாமக்கல் அருகே தனியாா் மருத்துவமனை கட்டடத்துக்கு வண்ணம் பூசுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட கிரேன் கவிழ்ந்து மின் பாதையில் விழந்ததில் 3 தொழிலாளா்கள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனா். நாமக்கல்- திருச்சி தேச... மேலும் பார்க்க