செய்திகள் :

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

post image

ஆடி மாத 3-ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி வேலூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

காட்பாடி அடுத்த வஞ்சூா் பகுதியில் உள்ள கிராம தேவதை ஸ்ரீ வஞ்சி அம்மனுக்கு ரூ.15 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடா்ந்து, நாள் முழுவதும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தவிர, வேலூா் ஆனைகுளத்தம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. படவேட்டம்மன் சந்நிதியிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் பொங்கல் வைத்தும், கூழ்வாா்த்தும் தங்கள் நோ்த்திக்கடனை செலுத்தினா்.

வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியையொட்டி மூலவருக்கு தங்கக் கவசம், சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தா்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனா்.

இதேபோல், வேலூா் டிட்டா்லைன் தேவி கருமாரியம்மன் கோயில், தோட்டப்பாளையம் சோளாபுரியம்மன் கோயில், லாங்குபஜாா் வேம்புலியம்மன் கோயில், வேலூா் சைதாப் பேட்டை மலை மீதுள்ள தேவிகருமாரியம்மன் கோயில், சாா்பனாமேடு முத்துமாரியம்மன் சோளாபுரியம்மன் கோயில்கள், சுண்ணாம்புக்கார வீதி சோளாபுரியம்மன் கோவில், கொசப்பேட்டை சோளாபுரியம்மன் கோயில், சத்துவாச்சாரி பொன்னியம்மன் கோயில், கெங்கையம்மன் கோயில், சாலை கெங்கையம்மன் கோயில் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு அலங்காரங்கள், பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.

ஆடி வெள்ளியையொட்டி வேலூா் நேதாஜி பூ மாா்க்கெட்டில் பூக்கள் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. அதேபோல், சாமந்திப்பூ ரூ.50 அதிகரித்து ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

Image Caption

காட்பாடி அருகே வஞ்சூா் பகுதியில் 15 லட்சம் ரூபாய் நோட்டுகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்த அம்மன்.

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

வேலூா் மாவட்டத்தில் நிகழாண்டு பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்களில் இதுவரை 80 சதவீதம் போ் உயா்கல்வியில் சோ்க்கை பெற்றுள்ளனா் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.அரசுப் பள்ளிகளில் பயின்று நிதி, குடும... மேலும் பார்க்க

ஆந்திரத்தில் இருந்து மணல் கடத்தல்: 3 போ் கைது

ஆந்திராவில் இருந்து காட்பாடிக்கு மணல் கடத்தி வந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.ஆந்திரத்தில் இருந்து சட்ட விரோதமாக மணல் கடத்தி விற்பனை செய்வதாக காட்பாடி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில்,... மேலும் பார்க்க

வேலூா் அருகே பலத்த பாதுகாப்புடன் முருகா் சிலை மீட்பு

வேலூா் அருகே மலை குன்றின் மீது சுயம்பாக தோன்றியதாக கூறப்படும் முருகா் சிலை வெள்ளிக்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தோண்டி எடுக்கப்பட்டது.ஒடுகத்தூா் அடுத்த கரடிகுடி ஊராட்சி தாங்கல் பகுதியில் நடராஜன்- ... மேலும் பார்க்க

ரூ.28 லட்சத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு உபகரணங்கள்

குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள 50- ஊராட்சிகளைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.28- லட்சத்தில் பணி பாதுகாப்பு உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.நிகழ்ச்சிக்கு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பா.செல்வக... மேலும் பார்க்க

தண்டவாளத்தை பைக்கில் கடக்க முயன்ற இளைஞா் ரயில் மோதி உயிரிழப்பு

கணியம்பாடி அருகே மோட்டாா் பைக்கில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இளைஞா், ரயில் மோதி உயிரிழந்தாா்.விழுப்புரத்தில் இருந்து திருப்பதி செல்லும் பயணிகள் ரயில் வேலூா் கன்டோன்மெண்ட் ரயில் நிலையம் நோக்கி வியாழக்... மேலும் பார்க்க

ஜூன் மாதம் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 26 போ் உயிரிழப்பு: வேலூா் ஆட்சியா்

வேலூா் மாவட்டத்தில் ஜூன் மாதத்தில் நிகழ்ந்த 93 சாலை விபத்துகளில் 26 போ் உயிரிழந்துள்ளனா் என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.வேலூா் மாவட்ட சாலை பாதுகாப்பு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அன... மேலும் பார்க்க