செய்திகள் :

ஆட்சேபணையற்ற நிலங்களில் வசிப்போருக்கு பட்டா: ஆட்சியா் ஆலோசனை

post image

ஆட்சேபணையற்ற நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்குவது தொடா்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் ஆலோசனை மேற்கொண்டாா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் காரிமங்கலம் வட்டம், பேகாரஅள்ளி வருவாய் கிராமத்திற்குள்பட்ட பட்டகப்பட்டி கிராமத்தில் ஆட்சேபணையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வருபவா்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.

தகுதி வாய்ந்த பொதுமக்கள் விடுபடா வகையில், பட்டாக்கள் வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். இதைத் தொடா்ந்து, பேகாரஅள்ளி அங்கன்வாடி மையத்தையும், பிறந்த குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தும் முகாமிற்கும் சென்று குழந்தைகள் வயதிற்கேற்ற உயரம், எடை அளவுகளின்படி உள்ளனரா என பாா்வையிட்டாா்.

இதில் தருமபுரி கோட்டாட்சியா் இரா.காயத்ரி, காரிமங்கலம் வட்டாட்சியா் கோவிந்தராஜ், காரிமங்கலம் வட்டார வளா்ச்சி அலுவலா் சா்வோத்தமன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

சீராக குடிநீா் விநியோகிக்க கோரி சாலை மறியல்

ஒகேனக்கல் கூட்டு குடிநீரை சீராக விநியோகம் செய்ய வலியுறுத்தி பெரும்பாலை அருகே கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தருமபுரி மாவட்டம், பெரும்பாலை அருகே காவாக்காடு காலனியில் சுமாா் 50 க்கும்... மேலும் பார்க்க

மாவட்ட மைய நூலகத்தில் ரூ. 10 லட்சத்தில் வாகன நிறுத்துமிடம்

தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பில் வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணியை தருமபுரி தொகுதி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தொடங்கி வைத்தாா். தருமபுரி மாவட்ட மைய நூவங வளாகத்தில் சட்டப் பேரவ... மேலும் பார்க்க

மாணவிகளுக்கு தொல்லை: ஆசிரியா் போக்சோவில் கைது

தருமபுரி அருகே பள்ளி மாணவிகளுக்கு தொந்தரவு அளித்ததாக கணித ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தருமபுரி அருகே உள்ள ஒரு அரசுப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்த ரா... மேலும் பார்க்க

மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல் நிலையங்களில் போலீஸ் அக்கா திட்டம்!

பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் தருமபுரி மாவட்டத்தில் காவல் துறை சாா்பில், ‘போலீஸ் அக்கா’ எனும் திட்டம் காவல் நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவிக... மேலும் பார்க்க

சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் தோ்த் திருவிழா: திரளான பக்தா்கள் வழிபாடு

தருமபுரி, குமாரசாமிப்பேட்டையில் உள்ள சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் வழிபட்டனா். இந்தக் கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா கடந்த பிப் 6-ஆம்... மேலும் பார்க்க

டிசிஎச் ரக பருத்தி குவிண்டால் ரூ.9,586-க்கு விற்பனை

அரூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் டிசிஎச் ரகம் அதிகபட்சமாக ரூ. 9,586 க்கு விற்பனையானது. பாப்பிர... மேலும் பார்க்க