செய்திகள் :

ஆட்டத்தின் சூழல்களை நன்றாக புரிந்துகொள்ளும் ஷ்ரேயாஸ் ஐயர்; ரிக்கி பாண்டிங் பாராட்டு!

post image

ஷ்ரேயாஸ் ஐயர் மிகவும் முதிர்ச்சியடைந்த வீரராக மாறிவிட்டதாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தியது.

இதையும் படிக்க: தோனி யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை: ஆடம் கில்கிறிஸ்ட்

ரிக்கி பாண்டிங் பாராட்டு

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் மிகவும் முதிர்ச்சியான வீரராக மாறிவிட்டதாகவும், ஆட்டத்தின் சூழல்களை நன்றாக புரிந்துகொள்வதாகவும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஷ்ரேயாஸ் ஐயரின் நம்பிக்கை முன்பை விட மிகவும் அதிகரித்துள்ளது. அவரது அனுபவமும் அதிகரித்துள்ளது. தற்போது அவர் மிகவும் முதிர்ச்சியடைந்த வீரராக மாறியுள்ளார். இதற்கு முன்பு ஆட்டத்தின் சூழல்களை புரிந்துகொண்டதைக் காட்டிலும் தற்போது அவர் மிகவும் நன்றாக ஆட்டத்தின் சூழ்நிலைகளை புரிந்து கொள்கிறார். கடந்த ஆண்டு அவர் கேப்டனாக ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று கொடுத்தார். அந்த அனுபவம் அவருக்கு உதவியாக இருக்கும் என்றார்.

இதையும் படிக்க: ஐபிஎல் தொடரிலிருந்து விக்னேஷ் புதூர் விலகல்: மாற்று வீரர் அறிவிப்பு!

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் கிங்ஸ் 6 போட்டிகளில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அரைசதம் விளாசிய ரோஹித், ரிக்கல்டான்; ராஜஸ்தானுக்கு 218 ரன்கள் இலக்கு!

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 2 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ராஜஸ்தான் ராயல... மேலும் பார்க்க

சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் ஷுப்மன் கில் விளையாடுவாரா?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நாளை (மே 2) நடைபெறும் போட்டியில் குஜராத... மேலும் பார்க்க

50-வது போட்டி: மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்!

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் இன்று நடைபெறும் 50-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்று... மேலும் பார்க்க

ஐபிஎல் ரோபோ நாய்க்கு காப்புரிமை கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

ஐபிஎல் ரோபோ நாய்க்கு காப்புரிமை கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.நடப்பு ஐபிஎல் தொடர் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல்லில் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி நடைபெற்... மேலும் பார்க்க

சிஎஸ்கேவுக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் எப்படி சாத்தியமானது? ரகசியம் பகிர்ந்த சஹால்!

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தது குறித்து பஞ்சாப் கிங்ஸ் வீரர் யுஸ்வேந்திர சஹால் மனம் திறந்துள்ளார்.ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற நேற்றையப் ப... மேலும் பார்க்க

பதிரானா பந்துவீச்சில் புதிய விஷயங்களை முயற்சிக்க வேண்டும்: சிஎஸ்கே பயிற்சியாளர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் மதீஷா பதிரானா அவரது பந்துவீச்சில் புதிய விஷயங்களை முயற்சிக்க வேண்டும் என சிஎஸ்கேவின் பந்துவீச்சு பயிற்சிளார் எரிக் சிமன்ஸ் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொ... மேலும் பார்க்க