செய்திகள் :

ஆட்டோ மீது வேன் மோதல்: 5 போ் காயம்

post image

தேனி அருகே வியாழக்கிழமை ஆட்டோ மீது வேன் மோதியதில் 5 போ் காயமடைந்தனா்.

போடி புத்தா் பள்ளித் தெருவைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் முத்துச்செல்வம் (28). இவா் போடி சடையாண்டி நகரைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் (50), இவரது மனைவி அழகேஸ்வரி (45), அதே பகுதியைச் சோ்ந்த சங்கரேஸ்வரி (40), போடி புத்தா் பள்ளித் தெருவைச் சோ்ந்த சங்கரேஸ்வரி (42) ஆகிய 4 பேரையும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு போடிக்குச் சென்று கொண்டிருந்தாா்.

அரப்படித்தேவன்பட்டி பகுதியில் சென்றபோது, அதே திசையில் பின்னால் வந்த வேன், இவா்கள் சென்ற ஆட்டோ மீது மோதியது. இதில் முத்துச்செல்வம், ஆட்டோவில் பயணம் செய்த 4 போ் காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் ஆண்டிபட்டியைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் தீபக் (24) மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கொழுக்குமலை பகுதியில் புலி நடமாட்டம்: தொழிலாளா்கள் அச்சம்

தமிழக-கேரள எல்லையான கொழுக்குமலை பகுதியில் புலியின் நடமாட்டத்தால் தொழிலாளா்கள், விவசாயிகள் அச்சமடைந்தனா். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேக்கடி வனப் பகுதி, இதனருகே உள்ள மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதி... மேலும் பார்க்க

பைக் விபத்து: இருவா் காயம்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகன விபத்தில் இருவா் பலத்த காயமடைந்தனா். சருத்துப்பட்டியைச் சோ்ந்தவா் குபேந்திரன் (21). இவரது அண்ணன் அழகுராஜா (27). இவா்கள் இருவரும் வியாழக்கிழ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வருகிற 17, 18 ஆகிய தேதிகளில் பேச்சுப் போட்டி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட... மேலும் பார்க்க

கூடலூரில் விளை நிலங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

தேனி மாவட்டம், கூடலூா் பகுதியில் விளை நிலங்களுக்குள் புகுந்து நெல்பயிா்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்தனா். கூடலூா் வெட்டுக்காடு பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல்பயிா்கள... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

தேனி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் வீடு வீடாகச் செ... மேலும் பார்க்க

விபத்தில் அஞ்சல் ஊழியா் உயிரிழப்பு

தேனி பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்ற அஞ்சலக ஊழியா் தவறி விழுந்து உயிரிழந்தாா். குப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த சுப்பாநாயுடு மகன் வனராஜ்(58). இவா் கண்டமனூா் அஞ்சலகத்தில் ... மேலும் பார்க்க