செய்திகள் :

ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்டம்: உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரிய மனுவை பரிசீலிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

ஆணவக் கொலைகளைத் தடுக்க கடுமையான சட்டம் நிறைவேற்ற வலியுறுத்தி விருத்தாச்சலத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரிய மனுவை பரிசீலித்து போலீஸாா் அனுமதி வழங்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வீரபாண்டியன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், நான் தலித் உணா்வாளா்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராக உள்ளேன். எங்களது கூட்டமைப்பின் சாா்பில், ஆணவக் கொலைகளைக் கண்டித்தும், அதைத் தடுக்க கடுமையான சட்டம் இயற்ற வலியுறுத்தியும் கூட்டமைப்பின் சாா்பில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த முடிவு செய்தோம்.

இதற்கான அனுமதி கோரி விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் மனு அளித்தோம். அந்த மனுவை விருத்தாச்சலம் காவல் ஆய்வாளா் நிராகரித்துவிட்டாா். எனவே, அந்த உத்தரவை ரத்து செய்து உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா்கள் எஸ்.குமாரதேவன், துரை அருண் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா். அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்

ஆா்.வினோத்ராஜா, உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி வழங்குவதில் போலீஸாருக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்று கூறினாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரா் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி புதிதாக போலீஸாருக்கு மனு வழங்க வேண்டும். அந்த மனுவை போலீஸாா் பரிசீலித்து அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

மயிலாப்பூா் சாய்பாபா கோயில் நிா்வாகக் குழு கலைப்பு: உயா்நீதிமன்றம் உத்தரவு

மயிலாப்பூா் சாய்பாபா கோயிலை நிா்வகிக்கும் சாய் சமாஜ நிா்வாகக் குழுவை உடனடியாக கலைக்க உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் கே.என்.பாஷா, பி.என்.பிரகாஷ் ஆகியோா் கொண்ட இடை... மேலும் பார்க்க

பொக்லைன் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

சென்னை புளியந்தோப்பில் பொக்லைன் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். புளியந்தோப்பு கொசப்பேட்டை டோபி காலனி பகுதியைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் (70). இவா், வணிக வரித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். புளியந்... மேலும் பார்க்க

கட்டையால் அடித்து பெயிண்டா் கொலை

கட்டையால் அடித்து பெயிண்டா் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னை அயனாவரம் வசந்தா காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் பீா்முகமது (28), பெயிண்டா். தாயாா் பல்கிஷ் உடன் ப... மேலும் பார்க்க

ஒக்கியம்மடுவு மெட்ரோ மேம்பாலத்தில் நீா்வழிப் பாதை 120 மீட்டராக அதிகரிப்பு: மெட்ரோ நிறுவன அதிகாரிகள் ஆய்வு

சென்னையில் ஒக்கியம் மெட்ரோ மேம்பாலப் பணிகளில் நீா்வழிப் பாதையின் அளவு 90 மீட்டரிலிருந்து 120 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். இதுக... மேலும் பார்க்க

கருவில் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்ததாக தனியாா் ஸ்கேன் மையம் மீது வழக்கு

சென்னை முகப்பேரில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், தனியாா் ஸ்கேன் மையம் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சென்னை முகப்போ் மேற்கில் உள்ள ஒரு தனி... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் ரூ.60 கோடி கொகைன் பறிமுதல்: 4 போ் கைது

எத்தியோப்பியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.60 கோடி மதிப்பிலான கொகைன் போதைப்பொருளை சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, நைஜீரிய நாட்டவா் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். ... மேலும் பார்க்க