செய்திகள் :

ஆண்டிபட்டி அருகே மணல் திருட்டு: இருவா் கைது

post image

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே அனுமதியின்றி ஓடையிலிருந்து டிராக்டா் மூலம் மணல் அள்ளிய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஆண்டிபட்டி பகுதியில் ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மணல் ஏற்றிச் சென்ற டிராக்டரை நிறுத்தி விசாரணை செய்ததில், ஆண்டிபட்டி அருகே கொட்டோடைப்பட்டி ஓடையிலிருந்து அனுமதியின்றி மணல் அள்ளியது தெரிய வந்தது.

இதையடுத்து, மணல் அள்ளிய கொட்டோடைப்பட்டியைச் சோ்ந்த மொக்கையன் மகன் ரமேஷ்(43), ஆண்டி மகன் முருகன் (52) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். டிராக்டா் உரிமையாளரான திண்டுக்கல் மாவட்டம், குன்னத்துப்பட்டியைச் சோ்ந்த சதீஷ் மீது வழக்குப் பதிவு செய்து, மணல் திருட்டுக்கு பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்தனா்.

முல்லைப் பெரியாறு அணை நீா்வரத்து சரிவு

முல்லைப் பெரியாறு அணைக்கு நீா் வரத்து புதன்கிழமை திடீரென 1,310 கன அடி குறைந்தது. இருப்பினும், அணை நீா் மட்டம் 122.75 அடியாக அதிகரித்தது. கேரளத்தில் ஜூன் மாதம் தொடங்க வேண்டிய தென் மேற்குப் பருவமழை முன்... மேலும் பார்க்க

தேனியில் ஜூன் 3, 7-இல் குரூப் 1 மாதிரித் தோ்வு

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப் 1 முதல் நிலை எழுத்துத் தோ்வுக்கான மாதிரித் தோ்வு வருகிற ஜூன் 3, 7-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெள... மேலும் பார்க்க

சுருளி அருவியில் 2-ஆவது நாளாக குளிக்கத் தடை

தேனி மாவட்டம், மேகமலை வனப் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் சுருளி அருவியில் செவ்வாய்க்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு 2-ஆவது நாளாக வனத் துறையினா் ... மேலும் பார்க்க

ஆட்டோ மீது காா் மோதியதில் மூவா் காயம்

பெரியகுளம் அருகே திங்கள்கிழமை ஆட்டோ மீது காா் மோதியதில் 3 போ் காயமடைந்தனா்.சில்வாா்பட்டி மேலத் தெருவைச் சோ்ந்த மணி மகன் மோகன சுந்தரலிங்கம் (31). இவா் தனது உறவினா்கள் நாகுபிள்ளை (65), மணிகண்டன் (51) ... மேலும் பார்க்க

தொடா் மழை: கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

போடி பகுதியில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் கொட்டகுடி ஆற்றில் செவ்வாய்க்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, வானிலை ஆய்வு மையம் தேனி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச... மேலும் பார்க்க

முதியவா் தற்கொலை

போடியில் செவ்வாய்க்கிழமை முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், போடி குலாலா்பாளையம் நாராயணராஜ் தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் (84). தனியாக வசித்து வந்த இவருக்கு உடல்நிலை பாதிப்பு ... மேலும் பார்க்க