செய்திகள் :

ஆதாரம் இன்றி குற்றஞ்சாட்டுவதே வழக்கமா? அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம்

post image

புது தில்லி: போதிய ஆதாரம் இன்றி குற்றஞ்சாட்டுவதே உங்கள் வழக்கமா? என்று அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமலாக்கத் துறையை உச்ச நீதிமன்றம் கடிந்துகொள்வது இது ஒன்றும் புதிதல்ல.. ஏற்கனவே, கடந்த ஆண்டு நவம்பர் மாதம், மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் பிணை மனு மீது அமலாக்கத் துறையை உச்ச நீதிமன்றம் கடிந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது தனிநபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டில், இதுதான் உங்கள் முறையா? என்று அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

ரூ.2,000 கோடி சத்தீஸ்கர் மதுபான முறைகேடு வழக்கில் கைதானவர்களின் பிணை மனு மீதான விசாரணையின்போது, அண்மைக்காலமாக அமலாக்கத் துறைக்கு எதிராக புகார்கள் அதிகரித்து வருவதைப் பார்க்கிறோம். யார் மீதும் போதிய ஆதாரங்கள் இல்லாமல் குற்றஞ்சாட்டுவீர்கள்.. இதுதான் உங்கள் முறையா? என்று உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் ஓகா வாய்மொழியாகக் கேள்வி எழுப்பியதாகத் தகவல்கள் வெளியாகின.

நீதிபதி அபய் ஓகா கூறுகையில், குற்றஞ்சாட்டப்பட்டவர் ரூ.40 கோடி ஈட்டியதாகக் கூறுகிறீர்கள். ஆனால், இந்த வழக்கிலும், வேறு எந்த நிறுவனத்திலும் இவருக்குத் தொடர்பிருந்ததற்கான ஆதாரங்களை உங்களால் காட்ட முடியவில்லை. இவர் அந்த நிறுவனத்தின் இயக்குநரா அல்லது அதிகப் பங்குகள் வைத்திருப்பவரா? அல்லது மேலாண் இயக்குநரா என்பதை நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்குரைஞர், நாளை நீதிமன்றத்தில் விளக்கம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அமலாக்கத் துறையால் குற்றஞ்சாட்டப்பட்டு, பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட தனிநபர்களின் மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த கருத்துகளை தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நாட்டு நலனுக்கு எதிராகச் செயல்படும் சமூக ஊடகங்களுக்கு தடை?

புது தில்லி; நாட்டு நலனுக்கு எதிராகச் செயல்படும் சமூக ஊடகங்களை தடை செய்ய நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்பு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்க... மேலும் பார்க்க

போர்ப்பதற்றம்: பதுங்குமிடங்களைச் சீரமைக்க அரசுக்கு எல்லையோர கிராமங்கள் கோரிக்கை!

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ள கிராமங்களில் பதுங்குமிடங்களைச் சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ள அங்குள்ள மக்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.ஜம்மு காஷ்மீரிலுள்ள பஹல்காமில் நடத்தப்பட... மேலும் பார்க்க

எல்லைத் தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தானியர் கைது!

எல்லைத் தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் இன்று (மே 5) கைது செய்தனர். இது குறித்து எல்லைப் பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரி கூறியதாவது, ''எல... மேலும் பார்க்க

பிரதமருடன் ராகுல் காந்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோசனை!

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் ஆலோசனை நடத்தினர். புது தில்லியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த முக... மேலும் பார்க்க

மே 7 அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு ஒத்திகை: மத்திய அரசு

புது தில்லி: மே 7-ஆம் தேதி அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் ஒத்திகையில் ஈடுபட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. போர் நடைபெறும்போது, குடிமக்கள் தங்களை எப்படி தற்காத்துக்கொள்ள வேண்டு... மேலும் பார்க்க

மாற்றி யோசித்த பெற்றோர்.. 10-ஆம் வகுப்பில் தோல்வி.. கேக் வெட்டிக் கொண்டாட்டம்

விரைவில் தமிழகத்தில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகவிருக்கும் நிலையில், கர்நாடக மாநில பெற்றோர்கள், தோல்வியடைந்த மகனுக்கு கேக் வெட்டிக் கொண்டாடிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.தேர்வில் தோல்வியட... மேலும் பார்க்க