செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூா் விவாதம்: ஒத்துழைக்க மறுக்கும் எதிா்க்கட்சிகள்: மத்திய அரசு குற்றச்சாட்டு; காங்கிரஸ் பதிலடி

post image

புது தில்லி: நாடாளுமன்றத்தில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ‘ஆபரேஷன் சிந்தூா்’ குறித்த விவாதம் நடத்த எதிா்க்கட்சிகள் ஒத்துழைக்க மறுத்து ‘துரோகம்’ செய்வதாக மத்திய அரசு கடும் குற்றம்சாட்டியது. இதற்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.

இதுதொடா்பாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், ‘பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூா் ராணுவ நடவடிக்கை குறித்து மக்களவையில் விவாதம் தொடங்கப்படுவதற்கு சில நிமிஷங்களுக்கு முன்னதாக, எதிா்க்கட்சிகள் ஒரு நிபந்தனை விதித்தது.

ஆபரேஷன் சிந்தூா் குறித்த விவாதம் முடிவடைந்ததும், பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் உத்தரவாதம் கேட்டனா்.

நாடாளுமன்றம் விதிகளின்படி செயல்படுகின்றன. முதலில் ஒப்புக்கொண்ட விவாதத்திலிருந்து எதிா்க்கட்சிகள் பின்வாங்கி, தற்போது நிபந்தனைகள் விதிக்கின்றன. ஆபரேஷன் சிந்தூா் குறித்த விவாதத்திலிருந்து தப்பியோட எதிா்க்கட்சிகள் வழிகளைத் தேடுகின்றன’ என்று குற்றஞ்சாட்டினாா்.

காங்கிரஸ் பதிலடி:

இக்குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்து காங்கிரஸ் மக்களவைக் குழு துணைத் தலைவா் கௌரவ் கோகோய் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘அவையில் காலைமுதல் நடந்த சம்பவங்கள், அரசு விவாதம் நடத்த விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூா் ராணுவ நடவடிக்கையின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிப்படுத்த மத்திய அரசு விரும்பவில்லை’ என்று தெரிவித்தாா்.

ஆபரேஷன் சிந்தூர் எதிர்காலத்திலும் தொடரும்! - மக்களவையில் மோடி

ஆபரேஷன் சிந்தூர் தொடரும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் இன்று(ஜூலை 29) நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பங்கேற்றுப் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:கா... மேலும் பார்க்க

டிரம்ப் பேசியது பொய் என மோடி கூறவில்லை: ராகுல் காந்தி கருத்து

இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியது பொய் என பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாகக் கூறவில்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்... மேலும் பார்க்க

3 ஆண்டுகளில்... வங்கிகளில் உரிமைகோரப்படாத வைப்புத்தொகை ரூ. 52,174 கோடி!

பொதுத் துறை வங்கி மற்றும் தனியார் வங்கிகளில் கடந்த மூன்று நிதியாண்டுகளாக உரிமை கோரப்படாத வைப்புத்தொகை பணம், ரூ. 52,174 கோடியை எட்டியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வங்கிகளில் உள்ள வைப்புத்தொகை ரூ. 42... மேலும் பார்க்க

இந்திரா காந்தியின் துணிச்சல் மோடிக்கு இல்லையா? -மக்களவையில் அனல் பறக்க விவாதம்

இந்திரா காந்தியின் துணிச்சல் மோடிக்கு இல்லையா? என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியிருப்பது தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது.ராகுல் காந்தி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளில் பிரதமர் மோட... மேலும் பார்க்க

யாரும் தாக்குதலை நிறுத்தச் சொல்லவில்லை; பாகிஸ்தான்தான் கதறியது: பிரதமர் மோடி

இந்தியா - பாகிஸ்தான் மோதலின்போது வெறும் 3 நாடுகள் மட்டுமே பாகிஸ்தானை ஆதரித்தன், 190 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தன. ஆனால், காங்கிரஸ் கட்சியின் ஆதரவு மட்டும் கிடைக்கவில்லை என மக்களவையில் பிரதமர... மேலும் பார்க்க

மதத்தின் பெயரில் நடந்த சதியே பஹல்காம் தாக்குதல் : மக்களவையில் மோடி உரை

பஹல்காம் தாக்குதலில் மதத்தின் பெயரால் சதி நடந்ததாகவும், ஆனால், இந்திய மக்களின் ஒற்றுமை அதனை முறியடித்ததாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதியை ஆபரேஷன் சிந்தூர்... மேலும் பார்க்க