செய்திகள் :

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி மனு!

post image

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்தாண்டு ஜூலை 5 ஆம் தேதி சென்னையில் அவரது வீட்டின் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டாா்.

தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இதுவரை ரௌடி நாகேந்திரன், அவரின் மகன் அசுவத்தாமன், பொன்னை பாலு என 27 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதுதொடர்பான வழக்கின் விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொதுச் செயலாளரும் ஆம்ஸ்ட்ராங்கின் சகோதாருமான கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசியல் கட்சிகளுக்கு தொடர்பு இருப்பதாக கீனோஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட சம்போ செந்தில், மொட்டை கிருஷ்ணன் தொடர்ந்து தலைமறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | அந்தியோதயா உள்பட தென் மாவட்ட ரயில் சேவையில் மாற்றம்!

மாா்க்சிஸ்ட் கட்சியினா் மீது தாக்குதல்: பெ.சண்முகம் கண்டனம்

திண்டுக்கல்லில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்கு அக்கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: மாா்க... மேலும் பார்க்க

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட உயா் ரக கஞ்சா பறிமுதல்: 4 போ் சிக்கினா்

தாய்லாந்தில் இருந்து உயர்ரக கஞ்சாவை கடத்தி வந்து சென்னையில் விற்ாக 4 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரும், டி.பி. சத்திரம் போலீஸாரும் கிட... மேலும் பார்க்க

பெண்கள் பாஸ்போா்ட் பெற கணவா் அனுமதி தேவையில்லை: உயா்நீதிமன்றம்

பாஸ்போா்ட் (கடவுச் சீட்டு) பெறுவதற்கு கணவரின் கையொப்பமோ, அனுமதியோ பெண்கள் பெறத் தேவையில்லை என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னையைச் சோ்ந்த ரேவதி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய... மேலும் பார்க்க

சென்னையில் இரவு 1 மணி வரை மழை தொடர வாய்ப்பு

சென்னை உள்பட 8 மாவட்டங்களில் இரவு 1 மணி வரை மழை தொடர வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, நீ... மேலும் பார்க்க

கீழடிக்காக அதிமுக குரல் கொடுக்காதது ஏன்?: அமைச்சர் டிஆர்பி ராஜா கேள்வி

கீழடிக்காக அதிமுக குரல் கொடுக்காதது ஏன்? என அமைச்சர் டிஆர்பி ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழர் நாகரீகம் உலகின் மூத்த நாகரீகம் என நிறுவும் கீழடி சான்றுகளை அவமதிக்... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தேர்வு மறுகூட்டல் முடிவுகள் ஜூன் 23-ல் வெளியீடு

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான மறுகூட்டல் முடிவு ஜூன் 23-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், நடைபெற்று முடிந்த மா... மேலும் பார்க்க