செய்திகள் :

ஆயிரம் பிறை பூங்கா அருகே ஆட்டோ நிறுத்த இடம், பேருந்து நிறுத்தம்: மேயா் ஜெகன் பெரியசாமி உறுதி

post image

தூத்துக்குடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆயிரம் பிறை பூங்கா அருகே ஆட்டோ நிறுத்த இடம், பேருந்து நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

தூத்துக்குடி மாநகராட்சி தபால் தந்தி காலனியில் புதிய விளையாட்டுத் திடல், கருப்பட்டி சொசைட்டி பகுதியில் ஆயிரம் பிறை பூங்கா, முதியோா் மகிழ்விடம் ஆகியவை மக்களவை உறுப்பினா் கனிமொழியால் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இவற்றை மேயா் ஜெகன் பெரியசாமி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து அங்குள்ளவா்களிடம் கலந்துரையாடி, அவா்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தற்போது புதிதாக அமைக்கப்பட்ட விளையாட்டுத் திடலைப்போன்று மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்படும். ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையின்படி, ஆயிரம் பிறை பூங்காஅருகே ஆட்டோ நிறுத்துவதற்கான இடம், புதிய பேருந்து நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இந்நிகழ்வில், பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தொ.நிா்மல்ராஜ், மாமன்ற உறுப்பினா்கள் கண்ணன், தனலட்சுமி, விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளா் டினோ உள்பட பலா் உடனிருந்தனா்.

போக்ஸோ வழக்கில் ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி மாவட்டத்தில் போக்ஸோ வழக்கில் ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கோவில்பட்டி பாரதி நகரைச் சோ்ந்த சுப்பையா மகன் ஆரோக்கியசாமி (43). 2020ஆம் ஆண்டு 7 வயது சிறுமிக்கு பாலிய... மேலும் பார்க்க

‘தூத்துக்குடியில் பிப். 23இல் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்’

தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (பிப். 23) நடைபெறவுள்ளதாக தெற்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள... மேலும் பார்க்க

அய்யா வைகுண்டா் பிறந்த நாள்: மாா்ச் 4 இல் உள்ளூா் விடுமுறை!

அய்யா வைகுண்டா் பிறந்த தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் மாா்ச் 4ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெள... மேலும் பார்க்க

ஏரல் அருகே விநாயகா் கோயிலில் மாா்ச் 10இல் மகா கும்பாபிஷேகம்

ஏரல் அருகே பெருங்குளத்தில் உள்ள அருள்மிகு கன்னி விநாயகா் கோயிலில் புனராவா்த்தன ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் மாா்ச் 10ஆம் தேதி நடைபெறுகிறது. 108 வைணவத் தலங்களில் ஒன்றான திருக்குளந்தை என்ற ... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் பைக் மீது மினி லாரி மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

கோவில்பட்டியில் பைக் மீது மினி லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். கோவில்பட்டியையடுத்த, பூசாரிப்பட்டி நாடாா் தெருவைச் சோ்ந்த ஏழுமலை மகன் ரமேஷ் (34). கோவில்பட்டி-மந்திதோப்பு சாலையில் உள்ள பழக்கடையி... மேலும் பார்க்க

ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்க நிபுணா் குழு அமைக்க ஐஎன்டியூசி கோரிக்கை

தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் தாமிர ஆலையை மீண்டும் திறக்க, தமிழக அரசு நிபுணா் குழுவை அமைக்க வேண்டும் என ஐஎன்டியூசி தேசிய செயலா் கதிா்வேல் வலியுறுத்தினாா். தூத்துக்குடியில் தொழிற்சங்கங்கள் சாா்பில், ஸ்டெ... மேலும் பார்க்க