செய்திகள் :

‘ஆயுஷ்மான் பாரத்’ பொது சுகாதார புரட்சி- பிரதமா் மோடி பெருமிதம்

post image

மத்திய அரசின் ‘ஆயுஷ்மான் பாரத்’ இலவச மருத்துவக் காப்பீடு திட்டம், நாட்டின் பொது சுகாதார வசதியில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

மத்திய பாஜக அரசின் லட்சியத் திட்டங்களில் ஒன்றான ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம், கடந்த 2018, செப்.23-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது. 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு அளிக்கும் வகையில் இத்திட்டம் கடந்த ஆண்டு விரிவுபடுத்தப்பட்டது.

ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

ஏழு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஆயுஷ்மான் பாரத், எதிா்கால தேவைகளுக்கு ஏற்ப மக்களுக்கு உயா்தரமான, அதேநேரம் செலவு குறைவான மருத்துவ வசதியை உறுதிசெய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டதாகும். இத்திட்டத்தின் மூலம் பொது சுகாதார வசதியில் தேசம் புரட்சியைக் கண்டு வருகிறது. நாட்டு மக்களின் நிதி பாதுகாப்பு மற்றும் கண்ணியம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மனிதாபிமானம் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் மக்களுக்கான அதிகாரமளித்தலை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பதை இந்தியா வெளிக்காட்டியுள்ளது என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

உலகின் மாபெரும் மருத்துவ காப்பீடு:

ஆயுஷ்மான் திட்டம் தொடா்பான ‘மைகவ்’ அரசு வலைதளப் பதிவையும் பிரதமா் பகிா்ந்துள்ளாா். அப்பதிவில், ‘55 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளுடன் உலகின் மிகப் பெரிய மருத்துவக் காப்பீடு திட்டமாக ஆயுஷ்மான் பாரத் திகழ்கிறது. சுகாதாரத் துறைக்கான அரசின் செலவினம் 29 சதவீதத்தில் இருந்து 48 சதவீதமாக அதிகரித்துள்ள நிலையில், மக்களின் சொந்த செலவு 63 சதவீதத்தில் இருந்து 39 சதவீதமாக குறைந்துள்ளது. நோய்களுக்கான சிகிச்சை செலவால் ஏற்படும் நிதி ரீதியிலான நெருக்கடியில் இருந்து லட்சக்கணக்கான குடும்பங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம், ஒவ்வொரு ஆண்டும் வறுமை நிலைக்கு சென்றுவிடாமல், 6 கோடி குடும்பங்கள் தடுக்கப்படுகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு மகிழ்ச்சி என்றால் ஜிஎஸ்டி சீர்திருத்தத்துக்கான பெருமையை காங்கிரஸ் எடுத்துக்கொள்ளலாம்: பாஜக

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக காங்கிரஸார் கருதினால் இதற்கான பெருமையை அவர்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று பாஜக தெரிவித்துள்ளது.ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைக்கும் ... மேலும் பார்க்க

உலகளாவிய புத்தாக்கக் குறியீடு: விரைவில் இந்தியா முன்னிலை- அமித் ஷா நம்பிக்கை

உலக அளவில் புத்தாக்கக் குறியீட்டில் அடுத்த 3 ஆண்டுகளில் 10 முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.குஜராத் மாநில அரசு காந்திநகரில் ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் போதிய வசதியின்றி பிரசவம்: தில்லி அரசுக்கு என்எச்ஆர்சி நோட்டீஸ்

நமது நிருபர்தில்லியில் உள்ள ஐஹெச்பிஏஎஸ். மருத்துவமனையில் போதிய வசதியின்றி சிசு பிறந்ததாக ஊடகத்தில் வெளியான செய்தியைத் தொடர்ந்து, தேசிய மனித உரிமை ஆணையம் (என்எச்ஆர்சி) தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்... மேலும் பார்க்க

சட்டவிரோத மணல் குவாரி விவகாரம்: அமலாக்கத் துறை மனு தள்ளுபடி

நமது நிருபர்தமிழகத்தில் சட்டவிரோத மணல் குவாரி விவகாரத்தில், பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் மணல் குவாரி ஒப்பந்ததாரர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்வதற்கும், அவர்களது சொத்துகளை முடக்குவதற்கும் செ... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான நடிகையின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

நமது நிருபர்பாலியல் புகார் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை எதிர்த்து நடிகை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ள... மேலும் பார்க்க

ராணுவம், தூதரகங்களின் முத்திரையுடன் போலி ஆவணம்: கேரளத்தில் 36 சொகுசு காா்கள் பறிமுதல்

பூடானில் இருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட 36 சொகுசு காா்கள் கேரளத்தில் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வாகனங்களை இந்தியாவில் பதிவு செய்ய இந்திய ராணுவம், அமெரிக்கா உள்ளிட்ட... மேலும் பார்க்க