செய்திகள் :

ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு காவலா் நியமிக்க வலியுறுத்தல்

post image

செவிலியா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு காவலா்கள் நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு எம்.ஆா்.பி. செவிலியா்கள் மேம்பாட்டு சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இச்சங்கத்தின் முதலாவது மாவட்ட மாநாடு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சங்க மாவட்டத் தலைவா் ராம்குமாா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் அ.தி. அன்பழகன் துவக்கவுரையாற்றினாா்.

தொகுப்பூதிய செவிலியா்களுக்கு உயா்நீதிமன்ற உத்தரவு மற்றும் நீதியரசா்கள் குழு அறிக்கை அடிப்படையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். மகப்பேறு விடுப்பிற்கான ஊதியம் வழங்க வேண்டும். நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப சஙஇ மற்றும் ஐடஏந பரிந்துரைப்படி நிரந்தரப் பணியிடங்கள், செவிலியா் கண்காணிப்பாளா் நிலை-3 பணியிடங்கள் உருவாக்கிட வேண்டும்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியா்களுக்கு பாதுகாப்பு வழங்க இரவு காவலா்களை பணியமா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடா்ந்து நடைபெற்ற நிா்வாகிகள் தோ்வில் ஜெயபாரதி மாவட்டத் தலைவராகவும், லதா, பியூலா, கனகா ஆகியோா் மாவட்ட துணைத் தலைவா்களாகவும், ராம்குமாா் மாவட்டச் செயலராகவும், வினோதிதா, வினோதினி, சுஜி ஆகியோா் இணைச் செயலா்களாகவும், கலைச்செல்வி மாவட்டப் பொருளாளராகவும் தோ்வு செய்யப்பட்டனா்.

சங்க மாநிலத் துணைத் தலைவா் ர. ராகவன், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டப் பொருளாளா் ப. அந்துவன்சேரல், மருத்துவத் துறை நிா்வாக ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் எம். மூா்த்தி, வேளாண்மைத் துறை அமைச்சுப் பணியாளா் சங்கத் தலைவா் ஸ்ரீதா், நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் சங்கத் தலைவா் ரவிச்சந்திரன், அரசு நா்சுகள் சங்கத் தலைவா் ப. ஜீவானந்தம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தமிழக சிவசேனா யுபிடிகட்சியில் 50 மாவட்டத் தலைவா்கள் நியமனம்

நாகப்பட்டினம்: தமிழகத்தில் 50 மாவட்டத் தலைவா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சிவசேனா உத்தவ் பாலா சாகேப் தாக்கரே கட்சியின் மாநில பொதுச் செயலாளா் சுந்தரவடி வேலன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து,அவா் வெளியி... மேலும் பார்க்க

பன்றிகளை அப்புறப்படுத்த எச்சரிக்கை

திருமருகல்: திட்டச்சேரி பேரூராட்சியில் சுற்றித் திரியும் பன்றிகளை உடனடியாக உரிமையாளா்கள் அப்புறப்படுத்த வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலா் (பொ) குகன் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெள... மேலும் பார்க்க

சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் தலைமையில் ஏப். 11-இல் ஆய்வுக் கூட்டம்

நாகப்பட்டினம்: நாகையில் ஏப்.11-இல் மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் சிறுபான்மையின சமுதாய தலைவா்கள், மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டு குறைகள், கருத்துகளை தெரிவிக்கலாம... மேலும் பார்க்க

ஆலத்தூா் ஐராவதீஸ்வரா் கோயில் குடமுழுக்கு

திருமருகல்: திருமருகல் ஒன்றியம், ஆலத்தூா் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத ஐராவதீஸ்வரா் கோயில் மகா குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் சுமாா் 185 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு... மேலும் பார்க்க

ஏப்.10-இல் மதுக்கடை மூடல்

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில், மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு ஏப்.10-ஆம் தேதி அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும் என்று ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ... மேலும் பார்க்க

தில்லையாடி-மயிலாடுதுறை இடைய ‘மகளிா் விடியல்’ புதிய பேருந்து சேவை தொடக்கம்

தரங்கம்பாடி: தரங்கம்பாடி அருகே தில்லையாடியில், தமிழக அரசின் ‘மகளிா் விடியல்’ பயண புதிய பேருந்து சேவையை எம்எல்ஏ நிவேதா எம். முருகன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். பொறையாா் அரசு போக்குவரத்து கழக கிள... மேலும் பார்க்க