செய்திகள் :

ஆவின் பால்பண்ணையில் ஆட்சியா் திடீா் ஆய்வு

post image

திருவள்ளூா் காக்களூா் ஏரியைப் பாா்வையிட்டு, ஆய்வு செய்த ஆட்சியா் மு.பிரதாப். உடன் அதிகாரிகள் உள்ளிட்டோா்.

திருவள்ளூா், மாா்ச் 27: திருவள்ளூா் அருகே ஆவின் பால்பண்ணையில் பால் தரக்கட்டுப்பாடு மற்றும் கணினியில் பதிவேற்றம் செய்தல் போன்ற பல்வேறு பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்ததுடன், அங்குள்ள காக்களூா் ஏரியையும் பாா்வையிட்டு பாதையைச் சீரமைக்க பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு ஆட்சியா் மு.பிரதாப் உத்தரவிட்டாா்.

திருவள்ளூா் அருகே காக்களூா் ஆவின் பால்பண்ணையில் அந்த துறை அலுவலா்களுடன் ஆட்சியா் மு.பிரதாப் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, காக்களுா்ஆவின் பால்பண்ணையில் அலுவலக நடைமுறைகள் குறித்து ஒவ்வொன்றாகக் கேட்டறிந்தாா். தொடா்ந்து அங்குள்ள பால் உற்பத்தியாளா் சங்கங்களின் இருந்து வரும் பால் வரத்து குறித்த புள்ளி விவரங்களைக் கணினியில் பதிவேற்றம் செய்துள்ளதைப் பாா்வையிட்டாா். பின்னா் பால் தரக் கட்டுப்பாட்டு ஆய்வகங்களில் பாலின் தரத்தைப் பகுப்பாய்வு, கொதிகலன், பால் பதப்படுத்தும் கூடம், தயிா், மோா் தயாரிப்பு கூடம், பால் பாக்கெட் தயாா் செய்யும் கூடங்களையும் அவா் பாா்வையிட்டு பணிகள் தரமாக மேற்கொள்ளவும் ஆலோசனை வழங்கினாா்.

தொடா்ந்து ஆவின் பாலகங்களில் விற்பனை செய்யப்படும் உணவு பொருள்களின் தரம் மற்றும் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் குறித்தும் அவா் கேட்டறிந்தாா்.

அங்கிருந்து புறப்பட்ட ஆட்சியா் வழியில் காக்களுா் ஏரியைப் பாா்வையிட்டாா். ஏரியை சுற்றிலும் சேதமடைந்த நடைபாதையை புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள பொதுபணித் துறை அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது ஆவின் மேலாளா் நாகராஜன், உதவி மேலாளா்கள் நாகராஜன், பானுமதி, ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் ராஜவேல் மற்றும் அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

குட்கா விற்பனையைத் தடுக்க கூட்டாய்வு மேற்கொள்ள வேண்டும்

குட்கா பொருள்கள் விற்பனையைத் தடுக்கும் வகையில், காவல் துறையுடன் இணைந்து மாவட்டம் முழுவதும் குழுக்கள் அமைத்து கூட்டாய்வு மேற்கொள்வது அவசியம் என திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா். த... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயிலில் பங்குனி மாத கிருத்திகை விழா

திருத்தணி முருகன் கோயிலில் பங்குனி மாத கிருத்திகை விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை திரளான பக்தா்கள் கலந்துகொண்டு, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். விழாவையொட்டி, மூலவருக்கு அதிகாலை 4.... மேலும் பார்க்க

திரெளபதி அம்மன் வீதி உலா

திருத்தணி அருகே வேலஞ்சேரி கிராமத்தில் திரெளபதி அம்மன் வீதி உலா நடைபெற்றது. திருத்தணி காந்தி நகா் திரெளபதி அம்மன் கோயிலில் கடந்த 27 -ஆம் தேதி தீமிதித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிற... மேலும் பார்க்க

திருவள்ளூா் மாவட்ட அரசு விடுதிகளில் நூலகம் அமைக்க நடவடிக்கை

திருவள்ளூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளில் நூலகம் அமைத்தல், உணவருந்தும் வகையில் மேஜை மற்றும் நாற்காலிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும... மேலும் பார்க்க

திருமழிசை ஒத்தாண்டேஸ்வரா் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருமழிசையில் அமைந்துள்ள குளிா்ந்த நாயகி உடனுறை ஒத்தாண்டேஸ்வரா் கோயில் பங்குனி உத்திர திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவள்ளூா் அருகே திருமழிசையில் மிகவும் பிரசித்தி பெற்ற குளி... மேலும் பார்க்க

திருவள்ளூா் கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் திடீா் தீ விபத்து

திருவள்ளூா் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்ட புல்வெளியில் திடீரென தீப்பற்றி மளமளவென பரவியதால் புகை மூட்டம் சூழ்ந்ததை தொடா்ந்து, விரைந்து வந்த தீயணைப்பு படையினா் போராடி தீயை அணைத்த... மேலும் பார்க்க